மேலும் அறிய

கோவை மேயரின் தம்பி பக்கத்து வீட்டில் குப்பை கொட்டுவதோடு, சிறுநீரை ஊற்றுவதாக புகார் - வெளியான சிசிடிவி காட்சிகள்

”சமீபகாலமாக மேயர் கல்பனா இந்த வீட்டில் தங்க ஆரம்பித்தவுடன் தொல்லைகள் அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு புகார்கள் அனுப்பி உள்ளோம்”

கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியில் வசிப்பவர் சரண்யா. தஞ்சாவூரைப் பூர்விகமாக கொண்ட இவர், தனது கணவர் கோபிநாத் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின்  தம்பி குமார், அவரது தாயார் காளியம்மாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தங்காமல்,  தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மேயர் கல்பனா தங்கியிருக்கும் அந்தக் காம்பவுண்டில் நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேயர் கல்பனா இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த காம்பவுண்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது சரண்யா குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து சரண்யா கூறுகையில், “கல்பனா மேயர் ஆவதற்கு முன்பு நன்றாக பழகியவர்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பின்னர் மோசமான அணுகு முறையில் ஈடுபடுகின்றனர். காம்பவுண்டில் இருக்கும் பொதுவான கேட்டை பூட்டு போட்டு வைத்துக்கொண்டு, காரைக் கூட வெளியில் எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரண்யா வீட்டின் சமையலறையின் அருகில் கெட்டுப்போன உணவு வகைகள், கோழி இறைச்சி, போன்றவற்றை கொண்டு வந்து கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வாளியில் சிறுநீரை பிடித்து அதையும் சமையலறையில் சுவற்றின் மீது ஊற்றுகின்றனர்.


கோவை மேயரின் தம்பி பக்கத்து வீட்டில் குப்பை கொட்டுவதோடு, சிறுநீரை ஊற்றுவதாக புகார் - வெளியான சிசிடிவி காட்சிகள்

கல்பனா மேயரானவுடன் தினமும் குப்பை எடுக்க இந்த பகுதிக்கு வாகனங்கள் வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் அவரது இல்லத்திலேயே வேலை செய்கின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து எதிர் வீட்டு மாடியில் ஏறி எங்கள் வீட்டு சமயலறை மீது சிறுநீரையும், கழிவுபொருட்களையும் ஏன் வீச வேண்டும்? இரண்டு ஆண்டுகளாகவே இவர்களின் டார்ச்சர் அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக மேயர்  கல்பனா இந்த வீட்டில் தங்க ஆரம்பித்தவுடன் தொல்லைகள் அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு புகார்கள் அனுப்பி உள்ளோம்.

சிறுநீர் மற்றும் கெட்டுப்போன உணவு பண்டங்களில் இருந்து வெளியேறும் தூர்நாற்றத்தால், வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என யாராலும் இருக்க முடியவில்லை. தொடர்ந்து தங்களை திட்டமிட்டு டார்ச்சர்  செய்து வருவதுடன், மேயர் கல்பனாவின் தம்பி குமார் தகாத வார்த்தைகளிலும் தங்களை இழிவாக திட்டி வருகிறார். இதன் காரணமாகவே சிசிடிவி கேமராவை பொருத்தி அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளோம். தஞ்சாவூரில் இருந்து பிழைக்க  வந்தவர்கள் என்று இழிவாக பேசுவதுடன், மந்திரிக்கப்பட்ட பூசணிக்காய் மற்றும் பூசை பொருட்களை வாசலில் போட்டுள்ளனர்.மேயர் கல்பனா குடும்பத்தினரின்  செயலால் கடந்த சில மாதங்களாக தூக்கமே இல்லாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.  பாரம்பரிய திமுகவினராகிய தங்களுக்கு திமுகவை சேர்ந்தவர்களாலேயே துன்பம் வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. திமுக தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் கல்பனாவை தொடர்பு கொண்ட போது, மேயர் மீட்டிங்கில் இருப்பதாக தெரிவித்த உதவியாளர், அடுத்து அழைத்த பொழுது மேயர் வெளியில் சென்று இருப்பதாகவும் அவர் வந்தவுடன் தகவல் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் மேயரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
Embed widget