மேலும் அறிய

’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ - கண்ணுக்குள் தேசிய கொடியை வரைந்த நகை தொழிலாளி

சுதந்திர தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்ணுக்குள் யு.எம்.டி. ராஜா தேசியக் கொடியை வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சுதந்திர தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவையை சேர்ந்த ராஜா என்ற நகைத் தொழிலாளி கண்ணுக்குள் தேசியக் கொடியை வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. நகை தொழிலாளியான இவர், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற கலைப்படைப்புகளை உருவாக்குவது வழக்கம். இந்நிலையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண் விழிகளில் தேசிய கொடியை வரைந்து அசத்தியுள்ளார். சுதந்திர தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண் முட்டை ஓட்டின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும் முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து, அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார்.


’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ - கண்ணுக்குள் தேசிய கொடியை வரைந்த நகை தொழிலாளி

இது குறித்து யு.எம்.டி. ராஜா கூறும் போது, “வருடம் தோறும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, பல்வேறு வகையில் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். அதன்படி 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மக்கள் முன்பு ஒரு கலை படைப்பை தர வேண்டும் என சிந்தித்தேன். அப்போது பள்ளி பருவத்தில் படித்த ’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ என்ற வரிகள் மனதில் பதிந்திருந்தது நினைவுக்கு வந்தது. அதை வைத்து கண்ணுக்குள் தேசிய கொடி ஓவியம் வரைய முடிவு செய்தேன். 


’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ - கண்ணுக்குள் தேசிய கொடியை வரைந்த நகை தொழிலாளி

அதனை முயற்சிக்கும் போது, பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. கண் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட போது, அவரும் இது போன்று செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கினார். இருப்பினும் அதனை செய்தே முடிக்க வேண்டுமென ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு வாங்கி கொடுத்த சுதந்திர நினைவுகள் என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தது. எனவே மீண்டும் முயற்சி செய்தேன். அப்போது முட்டை ஓட்டில் கருவிற்கு மேல் லேசான படலத்தில் வரையலாமென எண்ணம் தோன்றியது. அதனை எடுத்து அந்த படலத்தை வெட்டி எடுத்து கண்ணில் வைத்த பொழுது அது கண்ணோடு சேர்ந்தது. 


’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ - கண்ணுக்குள் தேசிய கொடியை வரைந்த நகை தொழிலாளி

பின்னர் அதில் எனாமல் பெயிண்ட் கொண்டு தேசியக் கொடியை வரைந்து கண்ணில் வைத்தேன். அதுவும் கண்ணோடு ஒட்டியது. இருப்பினும் அது சரியாக ஒட்டாமல் கண்ணிற்குள் சுருண்டு விட்டது. இதுபோன்று 15, 16 முறை தோல்வி அடைந்து அதன் பின் கண்ணில் உள்ள வெள்ளை வெளியில் அதனை வைத்த பொழுது அது மிகச் சரியாக அமைந்தது. அப்பொழுது சுதந்திரம் கிடைத்தது போல் மகிழ்ச்சி அடைந்தேன். அதே சமயம் குழந்தைகள் சிறுவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இது போன்று முயற்சியில் ஈடுபட வேண்டாம்” எனத் தெரிவித்தார். கண்ணுக்குள் தேசியக் கொடியை வரைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget