மேலும் அறிய

"இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு பெண் மீது கை வைத்தால், கை இருக்காது" - தமிழிசை ஆவேசம்

உதவி எண் சரியாக வேலை செய்யவில்லை. காவலன் செயலி எந்தளவிற்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த செயலியை பிரபலப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம் - தமிழிசை செளந்தரராஜன்


 “இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு பெண் மீது கை வைத்தால், கை இருக்காது” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார்.

கோவையில் விமான நிலையம் பகுதியில் ஒரு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று வலுக்காட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. மறுநாள் இதுதொடர்பான செய்திகள் வெளியே வந்ததை அடுத்து, தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளானது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பாஜக பெண் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது தமிழிசை செளந்தரராஜனிடன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ஆவேசமாக பதிலளித்தார்.

பொள்ளாச்சியை போல கோவையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. இரண்டு ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள நடைபெற்றுள்ளதால், தொடர்ச்சியாக இரண்டு ஆட்சியிலும் காவல்துறை சரியில்லையா? என்ற கேள்விக்கு

ஆட்சியை பற்றியை தற்போது தனக்கு கவலையில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே கவலையாக இருக்கிறது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். யார் அந்த சார்? என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். தற்போது யார் அந்த சார்கள் என கேட்கவேண்டியுள்ளது. குற்றவாளிகள் திமுக ஆதரவில் இருப்பதால், காவல்துறையால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஏதாவது சார் கூட தொடர்பில் இருந்தால் என்ன செய்வது?. அப்பா, அப்பா என்று சொல்கிறீர்கள் அப்பா பாதுகாப்பு கொடுக்க வேண்டாமா?. அப்பாவே கண்டுகொள்ளாமல் இருப்பதால், மற்றவர்கள் நமக்கு என்ன என்று சென்றுவிடுகிறார்கள். இதன் காரணமாக கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஏற்கெனவே, நான் கூறியதுபோல, பெண்களே ஆயுதத்தை எடுக்க வேண்டிய காலம் தமிழ்நாட்டில் வந்துள்ளது என்பதை நான் நினைக்கிறேன்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றத்திற்கு அரசு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு

உதவி எண் சரியாக வேலை செய்யவில்லை. காவலன் செயலி எந்தளவிற்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த செயலியை பிரபலப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்த செயலியில் உதவி கேட்பதற்குள் பெண்களை தூக்கிக் கொண்டு சென்றுவிடுகிறார்களே. இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு பெண் மீது கை வைத்தால், கை இருக்காது. பெண் குழந்தைகளை பெற்ற அம்மாக்கள் சும்மா விட்டுட்டு இருப்பார்களா?. தமிழ்நாடு மிகமிக மோசமான சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

”இன்னும் 2 நாட்களுக்கு மட்டும் கையிருப்பு” - LPG தட்டுப்பாடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
”இன்னும் 2 நாட்களுக்கு மட்டும் கையிருப்பு” - LPG தட்டுப்பாடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
மூடப்பட்ட ஆட்டோ LPG பங்க்... வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் டிரைவர்கள்...
மூடப்பட்ட ஆட்டோ LPG பங்க்... வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் டிரைவர்கள்...
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget