’கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ – கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்
"கோவை மாவட்டம் முழுவதும் வால்பாறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பவானி ஆற்றுப்பகுதி உள்ளிட்ட 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது"
வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், koovai மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரஸ் அகமது, “கோவை மாவட்ட நிர்வாகம் வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை சிறப்பாக எடுத்திருக்கிறது. தாலுக்கா வாரியாக பொது மக்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டிருக்கின்றன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரச்சனை இருக்கும் பகுதிகளை நாளை பார்வையிட உள்ளோம். மாவட்டம் முழுவதும் பருவ மழை பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், ”கோவை மாவட்டம் முழுவதும் வால்பாறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பவானி ஆற்றுப்பகுதி உள்ளிட்ட 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 17 பழங்குடியின கிராமங்களுக்கு ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி உள்ளோம். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்த பிரச்சனை வந்தாலும் உடனே அவர்களுக்கு உதவ முதல் நிலை மீட்பாளர்கள் 1835 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத் தேவையில்லை. அதே சமயம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும்” என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையர் ராஜா கோபால் சுங்காரா, “இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது. மாநகராட்சிப் பகுதியில் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலாங்குளம் உபரி நீர் பாதாள சாக்கடை வழியாக நொய்யல் நதிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பிரச்சனையும் குறைந்து வருகிறது” என அவர் தெரிவித்தார். மாநகரம் மற்றும் மாவட்டங்களில் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் தீபக் தாமோதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
https://bit.ly/2TMX27X
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
https://bit.ly/3AfSO89
ட்விட்டர் பக்கத்தில் தொடர
https://bit.ly/3BfYSi8
யூடிபில் வீடியோக்களை காண
https://bit.ly/3Ddfo32