மேலும் அறிய

கோவை செம்மொழிப் பூங்கா: ஸ்டாலின் திறப்பு! டிசம்பர் 1 முதல் பொதுமக்கள் பார்வை! புதிய அனுபவங்கள் காத்திருக்கு!

இயற்கையோடு மனிதன் மீண்டும் இணைவதற்கான ஒரு தளமாகவும் இப்பூங்கா உருவாகி வருவதால், கோவையின் புது அடையாளமாக செம்மொழி பூங்கா மாறும் என்று கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், உருவாகி வரும் செம்மொழி பூங்கா பாரம்பரியமும் பசுமையும் கலந்த நவீனத்துவத்துடன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழின் செம்மொழிப் பெருமையை பிரதிபலிக்கும் விதமாகவும், இயற்கையோடு மனிதன் மீண்டும் இணைவதற்கான ஒரு தளமாகவும் இப்பூங்கா உருவாகி வருவதால், கோவையின் புது அடையாளமாக மாறும் என்று கூறப்படுகிறது.


கோவை செம்மொழிப் பூங்கா: ஸ்டாலின் திறப்பு! டிசம்பர் 1 முதல் பொதுமக்கள் பார்வை! புதிய அனுபவங்கள் காத்திருக்கு!

கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் தேதி முதல் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் செம்மொழிப்பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்காவை வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட பின், டிசம்பர் 1-ம் தேதி முதல் செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம். பள்ளிக் குழந்தைகளுடன் முதல்வர் கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளை முதல்வர் பார்வையிட உள்ளார். கோவை நகரின் முக்கியப் பிரமுகர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

செம்மொழிப் பூங்காவில் மொத்தமுள்ள 45 ஏக்கர் பரப்பளவில் 7 ஏக்கர் மாநாட்டு மையம் போக, மீதமுள்ள பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். செம்மொழிப்பூங்காவை பராமரிக்கும் பணியை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் பார்த்துக் கொள்ளும். மாநகராட்சி நிர்வாகம் அதனை மேற்பார்வையிடும்.கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட பின், டிசம்பர் 1-ம் தேதி முதல் செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம். செம்மொழிப்பூங்கா பணிகள் தாமதமானால், தாமதம் என்று சொன்னவர்கள், வேகமாய் நடந்தால் அவசரமாய் நடப்பதாக சொல்கின்றனர். தற்போது அவசியம் வந்துவிட்டதால், செம்மொழிப் பூங்காவை திறக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், அரசு முதன்மைச் செயலர் (நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை) த.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை செம்மொழிப்பூங்கா தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற உள்ள ‘டிஎன்ரைஸ்’ நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை செம்மொழிப் பூங்கா: ஸ்டாலின் திறப்பு! டிசம்பர் 1 முதல் பொதுமக்கள் பார்வை! புதிய அனுபவங்கள் காத்திருக்கு!

இந்த பூங்கா, வெறும் ஓய்வுக்காக மட்டுமல்லாமல், கற்றலும் அனுபவமும் கலந்து மக்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 வகையான தோட்டங்கள் மற்றும் 3 வகையான வனங்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுதவிர இயற்கை அருங்காட்சியகம்,  1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், நர்சரி தோட்டம்,  வாகனநிறுத்தம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான பூங்காவுக்குள் நடைபாதைகள், உடற்பயிற்சி கூடங்கள், விழா மண்டபங்கள், வெளிநாடுகளின் தோட்ட மாதிரிகள், சிறுவர் விளையாட்டு பகுதி, விசிட்டர்கள் சென்டர், குளிரூட்டிய அரங்குகள், உணவகம், மற்றும் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Embed widget