மேலும் அறிய

கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காரணமாக 1500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள், நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்டீல், பிக் அயர்ன், ஸ்கிராப், காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மூலப்பொருட்கள் விலை உயர்வினால் பணி உத்தரவுகளை செய்து தர முடியாத நிலை ஏற்படுவதாகவும், பல தொழிற்கூடங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொழிற்துறையினர் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும் குறுந்தொழில் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.


கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்கள் விலை உயர்வினை கட்டுப்படுத்த கோரி, சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பினர் இன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் பங்கேற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் கொடிசியா, டேக்ட் உள்ளிட்ட 46 அமைப்புகள் பங்கேற்றுள்ளன. கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காரணமாக 1500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.


கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

இது குறித்து டேக்ட் அமைப்பின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “தங்கம் விலை போல நாளுக்கு நாள் மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மூலப்பொருட்கள் விலை 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்விற்காக கட்டுப்பாடு இல்லாததால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பெரு நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆர்டர் முறையில் குறுந்தொழில் கூடங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வேலை உயர்வால் ஆர்டர்கள் வருவதில்லை. குறுந்தொழில் கூடங்கள் உற்பத்தி நிறுத்த வேண்டிய நிலையில் உள்ளது. 


கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், மூலப்பொருட்கள் விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்க கோரியும் இன்று ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதும் 25 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பும், கோவையில் 1500 கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்புகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
Coimbatore power cut: கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget