மேலும் அறிய

கோவையில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு ; பேரணியில் கட்டுப்பாடுகளை மீறியதால் நடவடிக்கை

கைகளில் தடிகளுடன் சாகா பயிற்சி மேற்கொண்டதாலும், பொதுக்கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் சிலர் கலந்து கொண்டதாலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ராஜவீதி தேர்நிலைத் திடல் வரை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, காக்கிபேண்ட் அணிந்தபடி ஊர்வலமாக நடந்து சென்றனர். இதையடுத்து ராஜவீதி தேர்நிலைத் திடல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பேரணியை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்தி, கம்பு, இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதை மீறி, கைகளில் தடிகளுடன் சாகா பயிற்சி மேற்கொண்டதாலும், பொதுக்கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் சிலர் கலந்து கொண்டதாலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கோவை மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் முருகன், இணைச்செயலாளர் குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயமல்ல என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதைதொடர்ந்து, தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணியுடன், பொதுகூட்டமும் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ள நிலையில், தமிழக காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி நிகழ்ச்சியின் போது யாரும் பாடல்கள் மற்றும் சாதி, மதம் ரீதியாக எந்த கருத்துகளையோ பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. பேரணியில் கலந்து கொள்வோர் லத்தி, கம்பு, இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. பேரணி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பேரணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி நடத்த வேண்டும். பேரணியில் போது எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்துக்கள் சேதமடைந்தாலும் அதற்கான இழப்பீடு கொடுக்கப்படும் என உறுதிமொழி அளிக்கவேண்டும். மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.
முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.
coimbatore power cut: கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
Coimbatore power cut: கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget