நிர்வாண குற்றச்சாட்டு: அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனின் கட்சி பதவி பறிப்பு!
தீபாவளி பண்டிகையின் போது அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டிற்குள் முழு நிர்வணமாக புகுந்ததாக கூறப்படுகிறது.

மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்ற நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணனின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட அதிமுக அவைத் தலைவராக கோபால கிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 முதல் 2019 வரை மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். அதற்கு முன்பாக இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டிற்குள் முழு நிர்வணமாக புகுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் உள்ள இடத்தில் முழு நிர்வணமாக வந்தது குறித்து கோபி எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணனை கோபி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்திய காவல் துறையினர் வீட்டிற்குள் குடி போதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல கோபால கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணன் நிர்வணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளை கோபி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன் மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து கோபாலகிருஷ்ணனை நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
ட்ரெண்டிங் செய்திகள்






















