மேலும் அறிய

நலமே சூழ்ந்தது.. வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட காட்டு யானை : குட்டியுடன் சேர்த்து வைக்க முயற்சி..

வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் வனப்பணியாளர்கள் ரோந்து செல்வது வழக்கம்.

அதன்படி கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தண்ணீர் மற்றும் பழங்களும் அந்த யானைக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.


நலமே சூழ்ந்தது.. வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட காட்டு யானை : குட்டியுடன் சேர்த்து வைக்க முயற்சி..

விடுவிக்கப்பட்ட காட்டு யானை

தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மூன்று நாட்களாக அந்த யானையுடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது. கூட்டத்துடன் இணைந்து குட்டி யானை நல்ல முறையில் இருப்பதாகவும், அந்த யானையை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெறும் தாய் யானையை, ஒரு யானைக்கூட்டத்துடன் வந்த குட்டி யானை சந்தித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடனும், சுறுசுறுப்பாகவும் இருந்ததோடு, நன்றாக உணவருந்தி வந்தது. இதனால் இன்று காலை கிரேனில் இருந்து அந்த பெண் யானையை வனத்துறையினர் விடுவித்தனர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை வனத்துறையினரின் சிகிச்சையால், மீண்டும் நலமுடன் வனப்பகுதிக்குள் சென்றது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

29 வகை வெளிநாட்டு மதுபானம்... தேர்தல் ரெய்டில் சிக்கிய லக்சுரி கார்...
29 வகை வெளிநாட்டு மதுபானம்... தேர்தல் ரெய்டில் சிக்கிய லக்சுரி கார்...
கோவை: பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை! உயர் அதிகாரி கைது, அதிர்ச்சி தரும் பின்னணி!
கோவை: பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை! உயர் அதிகாரி கைது, அதிர்ச்சி தரும் பின்னணி!
சோசியல் மீடியா பதிவுகள் கண்காணிப்பு: தேர்தல் விதிமீறினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்
சோசியல் மீடியா பதிவுகள் கண்காணிப்பு: தேர்தல் விதிமீறினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்
சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் கவனம் – கோவை கலெக்டர் கடும் எச்சரிக்கை
சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் கவனம் – கோவை கலெக்டர் கடும் எச்சரிக்கை
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Trump Stunned by Iran: “ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
“ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Embed widget