மேலும் அறிய

பரபரப்பு.. மகளை ஆபாச படம் எடுத்த இளைஞரை கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை

திருப்பூரில் 14 வயது மாணவியுடன் பழகி, படம், வீடியோ எடுத்த வாலிபரை மாணவியின் தந்தையே கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் விபரீதம்

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், இவருடைய மகன் புவனேஸ்வரன் - வயது 25. இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது இவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி அவர் என்ன சொன்னாலும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்ததை புவனேஸ்வரன் செல்போனில் படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். மேலும் அதை தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். இதைப் பார்த்த புவனேஸ்வரனின் நண்பரான தமிழரசன் அந்த படங்கள், வீடியோவை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டார் என சொல்லப்படுகிறது

தமிழரசன் அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கு அனுப்பியதுடன் அவரிடம் ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த நண்பன்

இந்த சம்பவத்திற்கு பிறகும் புவனேஸ்வரன், மாணவியுடனான பழக்கத்தை கைவிடாமல், மீண்டும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று படம், வீடியோ எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை ஆத்திரம் அடைந்து புவனேஸ்வரனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

அதன்படி அவர் தமிழரசனை சந்தித்து, புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என்று கூறி உள்ளார். இதற்கு தமிழரசனும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி புவனேஸ்வரனை கொலை செய்வதற்காக தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையை தமிழரசன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரனை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழரசன் மது குடிக்கலாம் என்று கூறி திருமுருகன்பூண்டி பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் தமிழரசன் புவனேஸ்வரனை காரில் ஏற்றிக்கொண்டு காந்திநகரை அடுத்த ஏ.வி.பி. லே அவுட் பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.


பரபரப்பு.. மகளை ஆபாச படம் எடுத்த இளைஞரை கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை

சரமாரியாக வெட்டி கொலை

காரில் இருந்து இறங்கிய புவனேஸ்வரனை, ஏற்கனவே அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்ட முயன்றதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரனை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியின் தந்தை கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தை, தமிழரசன் மற்றும் கூலிப்படை கும்பல் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
Embed widget