மேலும் அறிய

கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..

101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது. இதனால் வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து வருகிறது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து இக்குளத்திற்கு வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வந்து, இக்குளம் நிறைந்த பின்னர் மீண்டும் நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இந்த குளம் வறண்டு காணப்பட்டது. பின்னர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முயற்சி காரணமாக நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதை தொடர்ந்து தண்ணீர்  வந்து மீண்டும் குளம் நிறைந்தது. 


கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..

இந்த குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மியாவாக்கி என்ற முறையில் பல்வேறு மரங்களை நட்டு அடர் வனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, அரசுத்துறை உதவியுடன்  மற்றும் தனியார் பங்களிப்பு, தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால் பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது. இதனைத்தொடந்து பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளலூர் குளத்திற்கு 150 வகையான பறவைகள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது. இதனால் வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து வருகிறது. 


கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..

இந்த நிலையில் வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியாக பட்டாம்பூச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, உலக புவி தினமான இன்று நடைபெற்றது. மேலும் வெள்ளலூர் குளக்கரையில் The Nature and Butterfly Society மூலம் ஆவணப்படுத்தப்பட்ட பட்டாம்பூச்சிகள் குறித்து Butterflies of Vellalore Wetland என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன் கூறுகையில், “கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் கடந்த 2017 ம் ஆண்டு முதல் நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பான களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். வெள்ளலூர் குளம் கடந்த 2017 ம் ஆண்டிற்கு முன்பு 12 ஆண்டுகளாக வறண்டு இருந்தது. வாய்க்கால்கள், தடுப்பணைகளை தூர்வாரி 2018 ம் ஆண்டில் தண்ணீர் கொண்டு வந்தோம். பின்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகளை வைத்து பராமரித்து வருகிறோம். இதன் காரணமாக உயிர் சூழல் அதிகரித்து பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் அதிகளவில் வந்து செல்கின்றன.


கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..

உலக புவி தினமான இன்று தனியார் நிறுவனத்தின் நிதியுதவி உடன் 39 இலட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் பல வண்ணச் செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவற்றை வைத்து பராமரிக்க உள்ளோம். இதன் மூலம் பட்டாம்பூச்சிகளை ஈர்ப்பதோடு, குழந்தைகளுக்கு பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பட்டாம்பூச்சிகளை பார்க்க நடைமேடை அமைக்க உள்ளோம். பட்டாம்பூச்சிகளை பற்றி அறிந்து கொள்ள கண்காட்சி அமைக்க உள்ளோம். மகரந்த சேர்க்கைக்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் பங்களிப்பு அவசியம். இங்கு பட்டாம்பூச்சிகள் வாழ்வதற்கான சூழல் மற்றும் அவற்றுக்கான உணவுக்கான சூழலை ஏற்படுத்த உள்ளோம். இந்தப்பணிகள் நான்கு, ஐந்து மாதங்களில் முடிவடையும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget