மேலும் அறிய

Crime: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீதம்

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து இருக்கலாம் எனவும், ராஜேஷ் தூக்கிட்டும், மற்றவர்கள் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

கோவை வடவள்ளி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 34 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி லக்‌ஷயா (29) பிரெஞ்சு டாக்டர் பட்டம் பெற்றுள்ளதோடு, டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவர்களது 10 வயது மகள் யக்சிதா தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமா (73) வசித்து வந்தார்.

வீட்டின் உள்ளே துர்நாற்றம்:

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இப்பகுதிக்கு இவர்கள் வாடகைக்கு வந்துள்ளனர். இதனிடையே கடந்த வியாழக்கிழமை லக்க்ஷயா, குன்னூரில் உள்ள அவரது அப்பா பாலன் உடன் காலையில் போனில் பேசி உள்ளார். பின்னர் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பலமுறை போனில் அவர் அழைத்த போது, சுவிட் ஆப் என்றே வந்துள்ளது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் சீலா என்பவர் சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணி அளவில் வீட்டிற்கு வெளியே லைட் போட சென்றுள்ளார். அப்போது துர்நாற்றம் வருவதை அறிந்த அவர், பாலனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் பாலன் வீட்டிற்கு பார்த்த போது, வீடு உள்பக்கம் தாழிடப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து வடவள்ளி காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை:

காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்த போது, படுக்கை அறையில் ராஜேஷ் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாகவும், லக்‌ஷயா, பிரேமா, யக்சிதா ஆகிய மூன்று பேர் படுக்கையில் சடலமாக கிடந்ததும் தெரிந்தது. இதையடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து இருக்கலாம் எனவும், ராஜேஷ் தூக்கிட்டும், மற்றவர்கள் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தற்கொலைக்கு வேறு எதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய  கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
தொண்டாமுத்தூரில் அண்ணாமலை – வேலுமணி அதிரடி பேச்சு!! தி.மு.க மீது கடும் விமர்சனம்...
தொண்டாமுத்தூரில் அண்ணாமலை – வேலுமணி அதிரடி பேச்சு!! தி.மு.க மீது கடும் விமர்சனம்...
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget