மேலும் அறிய

கோவையில் லஞ்சப் புகாரில் சிக்கும் காவலர்கள் - ஒரே நாளில் 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட்!

கடந்த இரண்டு நாட்களில் லஞ்சப் புகாருக்கு உள்ளான 5 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பிரிவில் கடந்த 20ஆம் தேதி இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கிணத்துக்கடவு காவல்துறையினர் கைது செய்தனர். கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரை ஜாமினில் விடுவிக்க கார் உரிமையாளரிடம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலம் ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் கார் உரிமையாளர் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தலைமை காவலர் வெங்கடாசலத்திடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை தலைமை காவலர் வெங்கடாசலம், காவல் ஆய்வாளர் சுரேஷிடம் வழங்கியுள்ளார். மேலும் 8 ஆயிரம் ரூபாயை தர வேண்டும் என மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் லஞ்சம் பெற்றது குறித்து கார் உரிமையாளர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை நடத்தினார். இதில் இருவரும் லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்தை இன்று கோவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமைக் காவலர் வெங்கடாசலம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் ஆயுர்வேத மையத்தில் மிரட்டி லஞ்சம் பெற்ற தலைமைக் காவலர் கிஷோர் மற்றும் முதல் நிலைக் காவலர் ஜோதிமணி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மையத்திற்கு சென்ற காவலர்கள் வாரந்தோறும் ஒரு தொகை கொடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக வழக்குப் பதிவு செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு வாரந்தோறும் தலைமைக் காவலர் கிஷோர் 20 ஆயிரம் ரூபாயும், முதல் நிலைக் காவலர் ஜோதிமணி 5 ஆயிரம் ரூபாயும் பெற்று வந்துள்ளனர். இதுதொடர்பாக ஆயுர்வேத மையத்தின் உரிமையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்தியதில் இருவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் கிஷோர் மற்றும் முதல் நிலைக் காவலர் ஜோதிமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சப் புகாரில் சிக்கிய 4 காவல் துறை அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று சூதாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெகமம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கடந்த இரண்டு நாட்களில் லஞ்சப் புகாருக்கு உள்ளான 5 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை... நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி
நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை... நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி
வயலில் புகுந்த காட்டுப் பன்றிகள் கூட்டம் – வாழை மரங்கள் முற்றிலும் சேதம்
வயலில் புகுந்த காட்டுப் பன்றிகள் கூட்டம் – வாழை மரங்கள் முற்றிலும் சேதம்
ரக்கு வாகனத்தில் ரூ.6.59 லட்சம்... ஆவணமின்றி கொண்டுவந்த பணம் கோவையில் பறிமுதல்...
ரக்கு வாகனத்தில் ரூ.6.59 லட்சம்... ஆவணமின்றி கொண்டுவந்த பணம் கோவையில் பறிமுதல்...
போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – கோவையில் வடமாநில இளைஞர் கைது
போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – கோவையில் வடமாநில இளைஞர் கைது
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
Maruti Fronx Flex: டெக்னாலஜில இந்த கார அடிச்சுக்க முடியாது; ஃபிராங்க்ஸில் ஃபிளெக்ஸ் தொழில்நுட்பம்; அசத்தும் மாருதி
டெக்னாலஜில இந்த கார அடிச்சுக்க முடியாது; ஃபிராங்க்ஸில் ஃபிளெக்ஸ் தொழில்நுட்பம்; அசத்தும் மாருதி
CV Shanmugam Vs Nayanthara : நயன்தாரா விவகாரம்.! திடீர் பல்டி அடித்த சி.வி. சண்முகம்- என்ன சொல்லியிருக்காரு தெரியுமா.?
நயன்தாரா விவகாரம்.! திடீர் பல்டி அடித்த சி.வி. சண்முகம்- என்ன சொல்லியிருக்காரு தெரியுமா.?
Nissan Magnite Offers: ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
Embed widget