மேலும் அறிய

'அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!

மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு வெளியாகி, 4 ஆண்டை கடந்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.  விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்த, பாலாற்றில் தடுப்பணை, பேருந்து நிலையம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார். திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில், மீன்பிடி துறைமுகத்திற்கான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
கிழக்கு கடற்கரை சாலையில், விழுப்புர மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், ஆலம்பரகுப்பம் பகுதியில் உள்ள, பக்கிங்ஹாம் கால்வாய் அருகே மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அவ்வாறு மீன்பிடி துறைமுகம் அமைந்தால், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் தங்களின் விசை படகுகளை நிறுத்திக் கொள்ளமுடியும். தற்பொழுது விசைப்படகு வைத்திருக்கும் அப்பகுதி மீனவர்கள், தங்களின் பெரிய படகுகளை நிறுத்த போதிய இடமில்லாத காரணத்தால், சென்னை ராயபுரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்துகின்றனர். அதேபோல் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் புதுச்சேரி அருகே காரைக்காலில் தங்களின் படகுகளை நிறுத்துகின்றனர்.
அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
ஆலம்பரகுப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்தால், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள், தங்களின் விசைப்படகுகளை இங்கு நிறுத்த ஏதுவாக இருக்கும். இதனால், மீனவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மீன்பிடி துறைமுகம் அமைக்க, முதற்கட்டமாக, 251 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது, இருந்தும் இதுவரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது, 19 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,000 க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும், 16 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இதற்கு சமமான எண்ணிக்கையில் படகுகள்  இருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
ஆலம்பரகுப்பம் பகுதியில், மீன்பிடி துறைமுகம் துவங்கப்பட்டால், பைபர் படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக விசைப்படகுகளுக்கு மாறி, தொழிலை மேம்படுத்திக் கொள்வர். அதேபோல மீன்பிடித் துறைமுகம் அமைந்தால் அந்த இடத்தில் ஏலக்கூடம் மீன் விற்பனை ஆகியவை அதிகரிக்கும் இதன் காரணமாக உள்ளூர் மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல மீன் பிடிப்பதற்கான வலை பின்னல் கூடங்களும்  மீன்களை பதப்படும் நிலையம் ஆகியவை அமைக்கப்படும், இதன் காரணமாக மேலும் சுற்றியுள்ள பல கிராம மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் எதுவும் துவங்காததால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து நலிவுற்றுள்ளது. முன்னாள் முதல்வரின் அறிவிப்பை இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே மீனவ கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
இதுகுறித்து அப்பகுதி மீனவர் குப்புராஜ் கூறுகையில், மீனவர் துறைமுகம் இல்லாத காரணத்தினால், புயலில் சிக்கி படகுகள் சேதம் அடைவது மட்டுமில்லாமல் உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதேபோல் துறைமுகத்தில் படகு நிறுத்தினால் படகின் ஆயுட்காலமும் நீடிக்கும், விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் வீணாக புதுச்சேரி, ராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு அலையாமல் சொந்த ஊரிலே தொழில் பார்ப்பார்கள். எனவே அரசு உடனடியாக அதற்கான பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அமைக்கப்படுமா மீன்பிடி துறைமுகம்?’ காத்திருக்கும் 2 மாவட்ட மீனவர்கள்.!
 
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கான தனி பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் துறைமுகம் அமைப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget