மேலும் அறிய

பஞ்சாபில் எங்களுக்கு என்ன நடந்தது? - தாக்கப்பட்ட தமிழக கபடி வீரர்கள் பரபரப்பு பேட்டி

எங்களது பயிற்சியாளர் பாண்டியை இரண்டு கைகளையும் பிடித்து அழைத்துச் சென்று அடித்தார்கள். அங்கிருந்து தமிழகத்திற்கு திரும்பினால்போதும் என்று இருந்தது - டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் பேட்டி

பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீரர்கள்

பஞ்சாபில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் விளையாட சென்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினார்கள். அவர்கள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி பேட்டி 

டெல்லியில் இருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்து விட்டோம். அறநிலைத்துறை அலுவலர்கள் , மாவட்ட விளையாட்டு அலுவலர் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் எங்களை வரவேற்றனர்.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டிக்குத் தமிழகத்திலிருந்து நான்கு பல்கலைக் கழகங்கள் தேர்வாகியிருந்தோம். அழகப்பா, பெரியார், மதர் தெரசா, பாரதியார் பல்கலைக்கழக அணிகள் தேர்வாகியிருந்தது. பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்கள் விளையாடிய போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் அவர்கள் வெளியேறி விட்டார்கள். 

மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மட்டும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டி முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தபோது , நமது வீராங்கனை ரெய்டு சென்றிருந்தார். அப்பொழுது எதிர் தரப்பு வீராங்கனைகள் அவரைத் தாக்க முயற்சி செய்தார்கள். நமது வீராங்கனை தற்காப்பிற்காக செயல்படப்போன போது அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கினார்கள். அதனால் ஐந்து நிமிடம் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

தமிழக துணை முதலமைச்சரின் போன் கால்

விரைவாக அமைச்சர்கள் அனைவரும் துணை முதல்வருக்கு இந்தத் தகவலை கொண்டு சென்றார்கள். நாங்கள் பாதுகாப்பின்மையாக உணர்ந்த போது தமிழக துணை முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தார்கள். தமிழக கபடி வீராங்கனைகளுக்காக துணை முதலமைச்சர் அழைத்து பேசியது, பாதுகாப்பாக வீராங்கனைகளை அழைத்து வந்துவிட முடியும் நம்பிக்கையை அளித்தது.

அங்கிருந்து கிளம்பி டெல்லி சென்றடைந்தோம், அங்கு தமிழ்நாடு மாளிகையில் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. 

கடந்த முறையும் அகில இந்திய கபடி போட்டியை பஞ்சாப் குருகாசி பல்கலைக்கழகம் தான் நடத்தினார்கள். இந்த முறையும் அவர்கள் தான் நடத்தினார்கள். ஒருவருக்கே ஏன் நடத்துவதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும். 

வடக்கு மாநிலங்களுக்கே இந்த போட்டிகளில் நடத்துவதற்கான அனுமதியை கொடுக்காமல், தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் கொடுக்கலாம்.

வட மாநிலங்களில் சென்று விளையாடும் போது கால நிலை, உணவு, இருப்பிடம் என அனைத்தும் கடினமாக உள்ளதால் போட்டியில் ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகக் கூறினார். முறையாக புள்ளிகளை அவர்கள் தரவில்லை.

ஐந்து நிமிடம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தமிழக அரசின் சரியான நடவடிக்கையால் அனைத்தும் சீராகிவிட்டது என்று கூறினார்.  வீராங்கனைகள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறினார்.

வீராங்கனை ஜெயஶ்ரீ பேட்டி

மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்காக அகில இந்திய போட்டியில் விளையாடினேன். தர்பாங்க பல்கலைக்கழக அணியுடன் எங்களுக்கு கால் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்பொழுது நான் ரேட் சென்றிருந்த போது அவர்கள் என்னை தாக்கினார்கள். நானும் என்னுடைய தற்காப்பிற்காக அவர்களை தாக்கினேன். பயிற்சியாளர்கள் எல்லாம் அதை தடுக்க தான் வந்தார்கள் , ஆனால் அது அடித்தது போன்று மாறிவிட்டது. அங்கிருந்த அதிகாரிகளும் எதுவும் செய்யவில்லை , எங்களை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

எங்களது பயிற்சியாளர் பாண்டியை இரண்டு கைகளையும் பிடித்து அழைத்துச் சென்று அடித்தார்கள்.

பிரச்சனை நடந்த பிறகு அங்கிருந்து இங்குள்ள பயிற்சியாளர் மூலம் அமைச்சர்களுக்குத் தகவல்களை தெரிவித்தோம். தொடர்ந்து அமைச்சர்கள் துணை முதலமைச்சர் தகவல் தெரிவித்தார்கள். அதன் பிறகு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 

எங்களது பயிற்சியாளரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். துணை முதலமைச்சர் பேசிய பிறகு அவரை விடுவித்தார்கள்.

தமிழக அரசு எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. அங்கிருந்து தமிழகத்திற்கு திரும்பினால் போதும் என்று இருந்தது. எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதித் தரக்கூறினார்கள். ஆனால் துணை முதலமைச்சர் பேசிய பிறகு அவை எதுவும் கேட்கப்படவில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget