மேலும் அறிய

இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்ற பணியாற்றுகிறோம் - அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் 2022-23 ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும்,அடுத்த அடுத்த வரும் காலங்களில் ஆண்டுக்கு 32 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு 2030 ஆண்டுக்குள் 261 கோடி மரங்கள் நடப்பட்டு தற்போது உள்ள வனப் பரப்பளவான 24% இருந்து 33% மாக வனப் பரப்பளவாக மாறும்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களை அதிகளவில்  சேதப்படுத்தி வருவதால் அதனை சுட்டுக் கொன்று பிடிக்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அமைச்சரிடம்  கோரிக்கை  விடுத்தனர்.


இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்ற பணியாற்றுகிறோம் - அமைச்சர் ராமச்சந்திரன்

அதனைதொடர்ந்து  இக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில்,

விவசாய நிலங்களில் தொல்லைக்கொடுக்கும் காட்டு பன்றிகள் குறித்து வனத்துறையிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால் விவசாய நிலங்களில் தொல்லைக் கொடுக்கும் நாட்டு பன்றிகளை விவசாயிகளே பிடித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள்ளலாம், எந்த நடவடிக்கையை வேண்டுமென்றாலும் கையாளலாம், அதற்கு எவ்வித அனுமதியும் பெற தேவையில்லை என்று விவசாயிகள் மத்தியில் கலகலப்பாக பேசினார்.

மேலும் சென்று ஆட்சி காலத்தில் காட்டு பன்றிகள் தொல்லையால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் போய் இருக்கலாம், ஆனால் தற்போதுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் வனத்துறை மூலம்  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும், உங்களுக்கு உரிய இழப்பீடு வரவில்லை என்றால் வனத்துறையின் அமைச்சாரான  என்னிடம் நேரடியாக நீங்கள் தொடர்புக் கொண்டு நேரடியாக புகார் தெரிவிக்கலாம், தகவல் அளிக்கலாம், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது செல்போன் எண்ணான 9443566666 ஐ அனைத்து விவசாயிகளும் குறித்துக்கொள்ளுங்கள்  என தனது செல்போன்  எண்னை அமைச்சர் தெரிவித்து பேசினார்.


இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்ற பணியாற்றுகிறோம் - அமைச்சர் ராமச்சந்திரன்

அதன் பின்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பருவ கால பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட  பல்வேறு நலதிட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டில் வனப்பரப்பை ஆண்டு தோறும் அதிகரித்து வரவேண்டும், வனப்பரப்பை 33 % அதிகரித்து முதலமைச்சரின் கனவை நினைவாக்கும் வகையில் வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது, அதற்கு விவசாயிகளின் ஆதரவு தேவை, இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறை மாறும் என்பதில்லை எந்தவித ஐய்யப்பாடுமில்லை, அதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். 2022-23 ஆண்டுகளில் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும், அடுத்த அடுத்த வரும் காலங்களில் ஆண்டுக்கு 32 கோடி மரங்கள் என திட்டமிடப்பட்டு 2030 ஆண்டுக்குள் 261 கோடி மரங்கள் நடப்பட்டு  தற்போது உள்ள வனப் பரப்பளவான  24% இருந்து 33% மாக வனப் பரப்பளவாக  மாறும் என தெரிவித்தார்.

அதன் பின் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி மலைகளில் உரிய அனுமதியில்லாமல் கல்குவாரி செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அவ்வாறு தவறு ஏதேனும் செய்திருந்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில்,

ஒகேனக்கல் வனப்பகுதியில் சமூகவிரோதிகள் சென்று யானையை சுட்டு கொண்டுள்ளனர். அதில் ஒருவரை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாதாரணமாகா காட்டில் வாழும் சிங்கத்தின் வயது 23 ஆண்டு காலம் மட்டுமே வண்டலூரில் உயிரிழந்த சிங்கம் வயது 33 ஆகையால் வனப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஆயுள் காலங்களை விட பூங்காவில் உள்ள உயிரினங்கள் ஆயுள் அதிகம், அங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது அதற்கு உதாரணமாக நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நாங்கள் மாற்றியுள்ளோம், நாட்டு பன்றிகளை விவசாயிகளே என்னவேண்டுமானலும் செய்துக்கொள்ளலாம். ஆனால் காட்டுப் பன்றி என்றால் அண்டை மாநிலமான கேராளவில் எந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதே போல காட்டுப் பன்றியை கட்டுப்படுத்துகின்ற  உரிய நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.


இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்ற பணியாற்றுகிறோம் - அமைச்சர் ராமச்சந்திரன்

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தமிழக முதன்மை வனக்காப்பாளர் சையத் முஜ்புல் அப்பாஸ், காஞ்சிபுரம் மாவட்ட வனக்காப்பாளர் ரவி மீனா,காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம்,எம்.எல்.ஏக்கள்,உள்ளிட்ட உள்ளாட்சி  பிரதிநிதிகள் ,துறைச் சார்ந்த அலுவலர்கள்,விவசாயிகள் பயனாளிகள் என பலர் கலந்துக் கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னையில் நாளை(03-06-2026) பவர் கட்... எந்த இடத்தில்? முழு விவரம் உள்ளே
Chennai Power Cut: சென்னையில் நாளை(03-06-2026) பவர் கட்... எந்த இடத்தில்? முழு விவரம் உள்ளே
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Embed widget