மேலும் அறிய

மருத்துவமனையில் எரிக்கப்படும் கழிவுகள்; மூச்சு திணறும் நோயாளிகள்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரானா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் அருகாமையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கழிவுகளை தினந்தோறும் குவியலாக கொட்டி எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியே வரும்  புகையால் நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதாக நோயாளிகள் வேதனை .
 

மருத்துவமனையில் எரிக்கப்படும் கழிவுகள்; மூச்சு திணறும் நோயாளிகள்!
 
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல் பட்டு வருகிறது.நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாகவும் உள்ளது.  இங்கு தற்பொழுது உள்நோயாளிகளாக 600-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு தற்போது இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதில் 350 க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

மருத்துவமனையில் எரிக்கப்படும் கழிவுகள்; மூச்சு திணறும் நோயாளிகள்!
இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சேரும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக பிரேதப் பரிசோதனை செய்யும் அறை அருகே கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய முகக் கவசங்கள் பாதுகாப்பு உடைகள் மருத்துவக் கழிவு பொருட்கள் மற்றும் கழிவு உணவு பொருட்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு உள்ளதால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசி வருகிறது. அதிகளவு குப்பை சேரும் ஊழியர்கள் அவற்றுக்கு தீ வைத்து விடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மருத்துவமனையில் எரிக்கப்படும் கழிவுகள்; மூச்சு திணறும் நோயாளிகள்!
 மருத்துவமனையின் பின்புறம் முக்கிய சாலை உள்ளதால் சாலைகளில் செல்பவர்களும் தூர்நாற்றத்தின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரும் அறைகளின் அருகிலேயே குப்பைகள் அதிக அளவில் சேர்ந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருப்பதால் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் அருகாமையில் கொட்டி எரிக்கபடுவதால் அதிகளவில் புகைமூட்டமாக நிறைந்து காணப்படுகிறது. இதனால் அருகாமையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மருத்துவமனையில் எரிக்கப்படும் கழிவுகள்; மூச்சு திணறும் நோயாளிகள்!
 
ஏற்கனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் இதுபோல் செயலால் நோயாளிகளுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நாள்தோறும் சேரும் குப்பைகளை வெளியே கொண்டு சென்று  எரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நோயாளிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி முறையாக மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
Embed widget