![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
டிடிஎஃப் வாசனின் அடி மடியில் கை வைக்கும் காவல்துறை; யூடியூப் சேனலுக்கு ஆப்பு
யூடியூப் சேனலை மறக்க காவல்துறையினர் வைத்த கோரிக்கை அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை.
![டிடிஎஃப் வாசனின் அடி மடியில் கை வைக்கும் காவல்துறை; யூடியூப் சேனலுக்கு ஆப்பு TTF Vasan Court action based on request made by police to forget YouTube channel TNN டிடிஎஃப் வாசனின் அடி மடியில் கை வைக்கும் காவல்துறை; யூடியூப் சேனலுக்கு ஆப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/94a71322b05431916cb7c8205bd26eeb1695121242293113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்.
யூடியூப்-ல் 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பிரபலமான டிடிஎஃப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.
பைக்கை எரித்துவிடலாம்..
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும், அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடலாம் என கருந்து தெரிவித்து இருந்தார்.
மூன்று வாரங்களுக்கு..
இதனிடையே டிடிஎப் வாசனுக்கு நவம்பர் 9-ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும், மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தொடர்ந்து சர்ச்சையில் வாசன்
இந்தநிலையில் காவல்துறை சார்பில் டிடிஎஃப் வாசன் youtube சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக, youtube சேனல் முடக்கப்பட வேண்டும். இதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது அவரது யூடியூப் சேனலை மறக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு வருகின்ற 29ஆம் தேதிக்கு ஊத்தி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரது youtube சேனலை முடக்க நடவடிக்கை எடுத்திருப்பது பொதுமக்கள் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)