மேலும் அறிய

Train cancel : ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள்.. 22 நாளைக்கு இதே நிலை.. பயணத்தை திட்டமிட முக்கிய தகவல்கள் உள்ளே..!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன

சென்னை  கடற்கரை -  செங்கல்பட்டு ரயில்கள்

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் (Chennai Beach to Chengalpattu Train) சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். அதே போன்று ரயில் கட்டணமும் மிகக் குறைவு என்பதால் வேலைக்கு செல்பவர்கள்  மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்வது கட்டணம் குறைவு என்பதால், தினமும் வேலைக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை விரும்புவார்கள்.

 

 

 பராமரிப்பு பணிகள்

 பொதுவாக மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது ரயில்கள் தாமதமாகுவதும், அல்லது ரயில்கள் பாதி வழியில்லையோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் முக்கிய ரயில்கள் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

 

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12:50 மணி வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு செல்லும் இரவு 10:40 முதல் 11:59 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோன்று தாம்பரம் செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்குச் செல்லும் 10:30 முதல் 1:30 வரை அதே போன்று இரவு 11 மணி மற்றும் 11:40 மணிக்கு புறப்படும் ரயில்கள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இதேபோன்று செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10 மணிக்கு செல்லும்மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9:30 மணிக்கு, திருமால்பூரில் இருந்து காலை 11:05 மணிக்கு புறப்படும் கடற்கரை செல்லும் ரயில்கள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இரவு நேரத்தில்சென்னை கடற்கரை கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

சிறப்பு ரயில்கள்

 

பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரம் இடையே காலை 9:30 மணி, 9:50, 10:10,10:30,10:50,11:10,11:30,11:50,12:10,12:30,12:50, அதேபோன்று இரவு நேரத்தில் 10:40,11:05,11:30,11:59 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது

 

கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு இடையே, காலை 10:45, காலை 11:10, பகல் 12 மணி, பகல் 12:50 மணி, மதியம் 1:30 மணி, மதியம் 1:55 மணி, இரவு 11.50 மணிக்கு, செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணி, காலை 10:30 மணி, காலை 11 மணி, 11 45 மணி, பகல் 12:30 மணி, பகல் ஒரு மணி, இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
Embed widget