மேலும் அறிய

கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!

''கடலூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.சி.சம்பத்தின் வெற்றிக்கு எதிராக உட்கட்சியை சேர்ந்த சிலரே உள்ளடி வேலை செய்ததாகவும், அவர்களை அய்யனார் கட்டாயம் பழிவாங்குவார் என்றும் கூறியிருந்தார்''

முன்னாள் கடலூர் நகராட்சித் தலைவராகவும் அதிமுகவின் கடலூர் நகர செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் ஆர்.குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆலப்பாக்கம் எஸ்.வீரமணி ஆகியோர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். 
 
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!
 
நகர செயலாளர் ஆர்.குமரனின் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு கூடி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு காரணமாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் இருப்பதாக குற்றஞ்சாட்டி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!
 
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பனும் களம் கண்டனர். சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலமாக கடலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்த எம்.சி.சம்பத்தை தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பன் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை சேர்ந்தவர் கடலூரில் சட்டமன்ற உறுப்பினரானார்.
 
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!
 
 
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., முன்னாள் தொழில் துறை அமைச்சர் சம்பத் அவர்களின் தோல்விக்கு, கடலுார் நகர துணைச் செயலர் கந்தன் என்பவர்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று, சத்தியம் செய்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கந்தன் வீடியோ வெளியிட்டிருந்தார், அதில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.சி.சம்பத்தின் வெற்றிக்கு எதிராக உட்கட்சியை சேர்ந்த சிலரே உள்ளடி வேலை செய்ததாகவும், அவர்களை அய்யனார் கட்டாயம் பழிவாங்குவார் என்றும் என்றைக்கும் எம்.சி.சம்பத்தின் விஸ்வாசியாகவே இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கந்தன் வீடியோவில் கூறியது போல் உள்ளடி வேலை பார்த்தவர்களை அய்யனார் தான் பழிவாங்கிவிட்டாரா என்ற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் நீக்கப்பட்டவர்களின் தரப்பில் கேட்டபோது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக தலைமைக்கு கொடுத்த தவறான தகவலின் அடிப்படையிலேயே மூன்று பேரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget