மேலும் அறிய

கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!

''கடலூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.சி.சம்பத்தின் வெற்றிக்கு எதிராக உட்கட்சியை சேர்ந்த சிலரே உள்ளடி வேலை செய்ததாகவும், அவர்களை அய்யனார் கட்டாயம் பழிவாங்குவார் என்றும் கூறியிருந்தார்''

முன்னாள் கடலூர் நகராட்சித் தலைவராகவும் அதிமுகவின் கடலூர் நகர செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் ஆர்.குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆலப்பாக்கம் எஸ்.வீரமணி ஆகியோர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். 
 
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!
 
நகர செயலாளர் ஆர்.குமரனின் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு கூடி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு காரணமாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் இருப்பதாக குற்றஞ்சாட்டி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!
 
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பனும் களம் கண்டனர். சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலமாக கடலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்த எம்.சி.சம்பத்தை தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பன் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை சேர்ந்தவர் கடலூரில் சட்டமன்ற உறுப்பினரானார்.
 
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் நீக்கத்திற்கு அய்யனார்தான் காரணமா?- கேள்வி எழுப்பும் அதிமுகவினர்...!
 
 
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., முன்னாள் தொழில் துறை அமைச்சர் சம்பத் அவர்களின் தோல்விக்கு, கடலுார் நகர துணைச் செயலர் கந்தன் என்பவர்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று, சத்தியம் செய்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கந்தன் வீடியோ வெளியிட்டிருந்தார், அதில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.சி.சம்பத்தின் வெற்றிக்கு எதிராக உட்கட்சியை சேர்ந்த சிலரே உள்ளடி வேலை செய்ததாகவும், அவர்களை அய்யனார் கட்டாயம் பழிவாங்குவார் என்றும் என்றைக்கும் எம்.சி.சம்பத்தின் விஸ்வாசியாகவே இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கந்தன் வீடியோவில் கூறியது போல் உள்ளடி வேலை பார்த்தவர்களை அய்யனார் தான் பழிவாங்கிவிட்டாரா என்ற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் நீக்கப்பட்டவர்களின் தரப்பில் கேட்டபோது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக தலைமைக்கு கொடுத்த தவறான தகவலின் அடிப்படையிலேயே மூன்று பேரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget