மேலும் அறிய

விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

சென்னை விமான நிலையத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை சாலையின் ஓரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து அசாம் செல்லவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணி உடல் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இறந்த உடல் அரை மணி நேரமாக விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் தீபக் பால். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது சக நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு செல்லும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார்.


விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இந்த நிலையில், விமானம் கிளம்ப தயாராகும் அரைமணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக்பாலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக்பால் சற்று உடல்நலம் தேறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் மீண்டும் தீபத்பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக்பால் மரணமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர். இதையடுத்து, தீபக்பால் மீண்டும் விமான நிலையத்திற்கு அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டது. எடுத்து வரப்பட்ட அவரது உடலை, சென்னை உள்நாட்டு விமான முனையதிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக கிடப்பில் போட்டுள்ளனர்.


விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இதனால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபக்பாலின் இறந்த உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்தது. அவரது உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு படையினர் காவலில் இருந்தனர். ஆனாலும், ஒரு இறந்த உடல் மூடப்பட்டோ, இறந்த உடலுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதையோ கொடுக்கப்படாமல் மனிதாபிமானமே இன்றி அவரது உடல் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் விமானத்துறை அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீபக்பால் இறந்தது குறித்து இரண்டு விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget