மேலும் அறிய

விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

சென்னை விமான நிலையத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை சாலையின் ஓரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து அசாம் செல்லவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணி உடல் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இறந்த உடல் அரை மணி நேரமாக விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் தீபக் பால். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது சக நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு செல்லும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார்.


விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இந்த நிலையில், விமானம் கிளம்ப தயாராகும் அரைமணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக்பாலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக்பால் சற்று உடல்நலம் தேறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் மீண்டும் தீபத்பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக்பால் மரணமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர். இதையடுத்து, தீபக்பால் மீண்டும் விமான நிலையத்திற்கு அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டது. எடுத்து வரப்பட்ட அவரது உடலை, சென்னை உள்நாட்டு விமான முனையதிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக கிடப்பில் போட்டுள்ளனர்.


விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இதனால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபக்பாலின் இறந்த உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்தது. அவரது உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு படையினர் காவலில் இருந்தனர். ஆனாலும், ஒரு இறந்த உடல் மூடப்பட்டோ, இறந்த உடலுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதையோ கொடுக்கப்படாமல் மனிதாபிமானமே இன்றி அவரது உடல் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் விமானத்துறை அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீபக்பால் இறந்தது குறித்து இரண்டு விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget