மேலும் அறிய

விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

சென்னை விமான நிலையத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை சாலையின் ஓரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து அசாம் செல்லவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணி உடல் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இறந்த உடல் அரை மணி நேரமாக விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் தீபக் பால். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது சக நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு செல்லும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார்.


விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இந்த நிலையில், விமானம் கிளம்ப தயாராகும் அரைமணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக்பாலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக்பால் சற்று உடல்நலம் தேறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் மீண்டும் தீபத்பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக்பால் மரணமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர். இதையடுத்து, தீபக்பால் மீண்டும் விமான நிலையத்திற்கு அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டது. எடுத்து வரப்பட்ட அவரது உடலை, சென்னை உள்நாட்டு விமான முனையதிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக கிடப்பில் போட்டுள்ளனர்.


விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இதனால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபக்பாலின் இறந்த உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்தது. அவரது உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு படையினர் காவலில் இருந்தனர். ஆனாலும், ஒரு இறந்த உடல் மூடப்பட்டோ, இறந்த உடலுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதையோ கொடுக்கப்படாமல் மனிதாபிமானமே இன்றி அவரது உடல் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் விமானத்துறை அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீபக்பால் இறந்தது குறித்து இரண்டு விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget