மேலும் அறிய

கடலூரில் இதுவரை ஒரு மாணவருக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

’’கடந்த செப்டம்பர் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூரில் இதுவரை 3 பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’’

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. முதலாம் அலை தொற்று குறைந்த நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்றே கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போனது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


கடலூரில் இதுவரை ஒரு மாணவருக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கூடங்கள் திறப்பதையொட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.


கடலூரில் இதுவரை ஒரு மாணவருக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிைலை பள்ளியில் பள்ளிகள் திறக்கப்பட்ட மறுநாளே பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பின் ,  கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியைகளுக்கும் மற்றும் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது முதல் முறையாக பண்ருட்டி அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் அரசு  பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கடலூரில் இதுவரை ஒரு மாணவருக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு தற்பொழுது தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு தான் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கினர்.


கடலூரில் இதுவரை ஒரு மாணவருக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

இந்நிலையில் நேற்று 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 14 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.  இதனால் அடுத்து மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மூலம் பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget