தமிழகத்தில் கடும் குளிர் ; முகவாதம் பாதிப்பு அபாயம் ! அறிகுறிகள், தடுக்கும் வழிகள் & எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், முகவாதம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளின் விபரங்களை நோயாளிகளுக்கு தெரிவிக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கடும் குளிர் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், முகவாதம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளின் விபரங்களை நோயாளிகளுக்கு தெரிவிக்கும் படி, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளை, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக, காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்றவற்றால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வகை பாதிப்பு, பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்பதால், முதுமை, நீரிழிவு போன்ற இணை நோயாளிகளுக்கு, 'முகவாதம்' பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது ;
தமிழகத்தில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற பாதிப்புகளை போல, கடும் குளிரில் முகவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி, வைரஸ் தொற்று போன்றவற்றால் ஏற்படும் பிரச்னை தான் முகவாதம்.
முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும், முக நரம்புகளில் உள்காயம் ஏற்படுவது, வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் முகவாதம் ஏற்படும். இதனால், வாயை குவிக்க முடியாது, உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழியே எச்சில் வடிவதுடன், சரியாக பேச இயலாமல் குளறும்.
எனவே, குளிர்ந்த தரையில், பாய், தலையணை உள்ளிட்ட விரிப்பு கள் இல்லாமல் படுப்பதையோ, ஒரு பக்க கன்னத்தை, நேரடியாக குளிர்ந்த தரையில் வைத்து படுப்பதையோ தவிர்க்க வேண்டும். முகத்தை நேரடியாக தரையில் வைத்து படுப்பதன் வாயிலாக, முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதே போல, கார், பஸ், ரயில்களில், அதிக நேரம் குளிர்ந்த காற்று, காது, கன்னம் பகுதியில் படும்படி பயணித்தாலும் முகவாதம் ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டால், குணமாவதற்கு இரண்டு முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, காது, கன்னம் பகுதியை பாதுகாப்பது அவசியம். இதற்கிடையே, அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு முக வாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முகவாதம் பாதிப்பு கண்டறியப்பட்டால் அதை தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. எவ்வகை பாதிப்பாக இருந்தாலும், உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















