பணியின்போது நெஞ்சுவலியால் புகைப்படக் கலைஞர் மரணம்.... ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர்!
மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசனின் மரணம், தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசனின் மரணம், தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்து பத்திரிக்கையின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி சீனிவாசன், நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியையொட்டி பெருமாள் கோயில்களில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் அதிகாலை 'கோயிலில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்த வேளையில், சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில், 'தி இந்து' ஆங்கில செய்தித்தாள் நிறுவனத்தின் மூத்த போட்டோகிராபர் கே. வி .சீனிவாசன் என்பவர் ஈடுபட்டிருந்த நிலையில், பணியின் போதே திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் கோவில் வளாகத்திலேயே உயிரிழந்தார்.
மூத்த புகைப்பட கலைஞரான கே.வி .சீனிவாசன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மறைந்த மூத்த புகைப்பட கலைஞர் கே.வி .சீனிவாசன் மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், ”தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த திரு.கே.வி.சீனிவாசன் அவர்கள்
(வயது 56), இன்று (02.01.2023) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
திரு.கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த திரு.கே.வி. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets