மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் பாதாள கழிவு நீரை சுத்தம் செய்ய இறங்கிய ரோபோ.. மேயர் சொன்ன நற்செய்தி..

அதி நவீன காமிராவுடன் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு நேரடி செயல்முறை விளக்கம்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில்  பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சி மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாடு காரணமாக பாதாள சாக்கடையில், அவ்வப்பொழுது அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீரானது சாலைகளில் வெளியேறியும், துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது நீக்கும் பணியினை  மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பாதாள கழிவு நீரை சுத்தம் செய்ய இறங்கிய ரோபோ.. மேயர் சொன்ன நற்செய்தி..
 
இதனிடையே பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய வாகன இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் பாதாள கழிவு நீரை சுத்தம் செய்ய இறங்கிய ரோபோ.. மேயர் சொன்ன நற்செய்தி..
 
இந்நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகன இயந்திரங்களுக்கு மாற்றாக தற்காலத்திற்கு ஏற்ப அதி நவீன தொழினுட்பத்துடன் கூடிய பாதாள சாக்கடை அடைப்புகளை  நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தை பயன்படுத்துவற்கு காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதனை செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி ஜெம்ரோபோடிக்ஸ் என்ற தனியார் ரோபோடிக்  நிறுவனம் தயாரித்துள்ள அதி நவீன  காமிராவுடன் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தின், செயல்பாடுகளை நேரடி செயல்முறை மூலம் அறிந்திடும் பொருட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.
 

காஞ்சிபுரத்தில் பாதாள கழிவு நீரை சுத்தம் செய்ய இறங்கிய ரோபோ.. மேயர் சொன்ன நற்செய்தி..
 
இன்றைய தினம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு ஒலிமுகமதுபேட்டை பகுதியில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை நீக்கி, இந்த ரோபோடிக் இயந்திரத்தின் செயல்பாடுகளையும், செயல்முறைகளையும், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி  பணியாளர்களுக்கும் தனியார் ரோபோடிக் நிறுவனம் செய்து காண்பித்தது.

காஞ்சிபுரத்தில் பாதாள கழிவு நீரை சுத்தம் செய்ய இறங்கிய ரோபோ.. மேயர் சொன்ன நற்செய்தி..
 
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்  கூறுகையில், காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க தற்காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று அதன்  செயல்பாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும்  நேரடியாக செய்முறை விளக்கமளித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பாதாள கழிவு நீரை சுத்தம் செய்ய இறங்கிய ரோபோ.. மேயர் சொன்ன நற்செய்தி..
 
சுமார் 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோடிக் இயந்திரம் மூலம்  125 கிலோ எடை வரை அடைப்புகளை வெளியே எடுக்கும் இதன் செயல்பாடுகளை முழுமையாக  ஆய்வு செய்த பிறகு இதனை வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம்  பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் பணியில் மனிதர்கள் பயன்படுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிவித்தார். இந்த ரோபோடிக் இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சசிகலா அஸ்லாம் பேகம் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.