மேலும் அறிய

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?

சென்னையிலிருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் எந்திர கோளாறு.

சென்னையில் இருந்து 139  பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஓடிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித  நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ஏழு விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் நல்வாழ்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது காலை 9 மணிக்கு மேல்  புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கப்பட முடியவில்லை என்றால், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புறப்பட்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது. பயணிகளை  நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?
 
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3:20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும்  அதிகாலை 1:30 மணிக்கு தோகாவிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதை போல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தது.
 
திடீர்  கோளாறு
 
இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை சுங்க சோதனை அனைத்தும் முடித்துவிட்டு தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் மொத்தம் 146 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. 
 
அதிகாலை 3:50  மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்து உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.
 
 
விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில்...
 
இதை அடுத்து விமானத்தை இழுவை வண்டி  மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு எழுத்து கொண்டு வந்து  புறப்பட்ட இடத்திற்கு நிறுத்தினர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமான பொறியாளர்கள் விமானத்திற்கு ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காலை 6 மணி வரை விமானம் பழுதுபார்க்கப்படவில்லை. இதை அடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும், விமானத்தில் இருந்து இறக்கி விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.விமான பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?
 
உயிர் தப்பினர்
 
அவ்வாறு பழுது பார்க்கப்பட  முடியவில்லை என்றால், பயணிகளை ஹோட்டல்கள் தங்க வைத்துவிட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை தான் விமானம் புறப்பட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் புறப்படுகிறது. இதனால் 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Embed widget