மேலும் அறிய

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?

சென்னையிலிருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் எந்திர கோளாறு.

சென்னையில் இருந்து 139  பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஓடிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித  நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ஏழு விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் நல்வாழ்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது காலை 9 மணிக்கு மேல்  புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கப்பட முடியவில்லை என்றால், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புறப்பட்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது. பயணிகளை  நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?
 
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3:20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும்  அதிகாலை 1:30 மணிக்கு தோகாவிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதை போல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தது.
 
திடீர்  கோளாறு
 
இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை சுங்க சோதனை அனைத்தும் முடித்துவிட்டு தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் மொத்தம் 146 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. 
 
அதிகாலை 3:50  மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்து உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.
 
 
விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில்...
 
இதை அடுத்து விமானத்தை இழுவை வண்டி  மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு எழுத்து கொண்டு வந்து  புறப்பட்ட இடத்திற்கு நிறுத்தினர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமான பொறியாளர்கள் விமானத்திற்கு ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காலை 6 மணி வரை விமானம் பழுதுபார்க்கப்படவில்லை. இதை அடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும், விமானத்தில் இருந்து இறக்கி விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.விமான பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் விமானம் பறக்க சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; உயிர் தப்பிய பயணிகள் - நடந்தது என்ன..?
 
உயிர் தப்பினர்
 
அவ்வாறு பழுது பார்க்கப்பட  முடியவில்லை என்றால், பயணிகளை ஹோட்டல்கள் தங்க வைத்துவிட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை தான் விமானம் புறப்பட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் புறப்படுகிறது. இதனால் 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget