மேலும் அறிய

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!

’’ஏரியின் கரையை 31.65 மீட்டர் உயரத்தில் இருந்து 32.15 மீட்டராக உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டம்’’

காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, மதுராந்தகம் ஏரி 23.3 அடி உயரமும் 696 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. 2,908 பரப்பளவு கொண்ட ஏரிக்கு ஆரணி, செய்யூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து கிளியாறு வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் 26 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
மதுராந்தகம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், கள்ளாறு வழியாக சென்று பாலாற்றின் பாலவாங்குளம் சென்றடைகிறது. இந்த ஏரி நீர் 1058 ஏக்கர் வரை செல்கிறது. உபரிநீர் மதுராந்தகம் உயர்மட்ட கால்வாய் வழியாக 30 குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இறுதியாக கடந்த 1986 ஆம் ஆண்டு இந்த ஏரி தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர்வாரவில்லை. இதனால், ஏரி கொள்ளளவை இழந்து, அதன் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களின் பரப்புகளும் குறைந்தன.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
இதற்கிடையில், கடந்த 2015ல் வடகிழக்கு பருவ மழையால் மதுராந்தகம் ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 530 மில்லியன் கனஅடி மட்டுமே சேமிக்க முடிந்தது. இதையொட்டி, மதுராந்தகம் ஏரியை புனரமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று கொண்ட தமிழக அரசு, கடந்த பிப்ரவரி மாதம் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி புனரமைக்க நபார்டு வங்கியின் கடனுதவி மூலம் 120 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை நிதியாக ஒதுக்கியது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
இந்த நிதியை கொண்டு மதுராந்தகம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தி 3950 மீட்டர் நீளமுடைய கரைகள் பலப்படுத்தப்படுகிறது. ஏரியை ஆழப்படுத்தும்போது, அதில் அள்ளப்படும் மண் எதிர்புறத்தில் உள்ள 1482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்தப்படுகிறது. வரத்து கால்வாய்கள் மற்றும் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது. 6 கலங்கல்களின் மட்டத்தை 50 செ.மீ உயர்த்தி, ஏரியின் கொள்ளளவை 530 மில்லியன் கனஅடியில் இருந்து 791 மில்லியன் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. ஏரியின் கரை அருகே 1650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
இதன் மூலம், ஏரியின் கரை 31.65 மீட்டர் உயரத்தில் இருந்து 32.15 மீட்டராக உயர்த்தப்படுகிறது. ஏரியின் கொள்ளளவை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் நீர் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இப்பணிக்காக நீர்வளத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 21 ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து, அடுத்தாண்டு ஜனவரி முதல் மதுராந்தகம் ஏரியின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மிக வறட்சியான காலங்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு, இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget