மேலும் அறிய

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!

’’ஏரியின் கரையை 31.65 மீட்டர் உயரத்தில் இருந்து 32.15 மீட்டராக உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டம்’’

காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, மதுராந்தகம் ஏரி 23.3 அடி உயரமும் 696 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. 2,908 பரப்பளவு கொண்ட ஏரிக்கு ஆரணி, செய்யூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து கிளியாறு வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் 26 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
மதுராந்தகம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், கள்ளாறு வழியாக சென்று பாலாற்றின் பாலவாங்குளம் சென்றடைகிறது. இந்த ஏரி நீர் 1058 ஏக்கர் வரை செல்கிறது. உபரிநீர் மதுராந்தகம் உயர்மட்ட கால்வாய் வழியாக 30 குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இறுதியாக கடந்த 1986 ஆம் ஆண்டு இந்த ஏரி தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர்வாரவில்லை. இதனால், ஏரி கொள்ளளவை இழந்து, அதன் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களின் பரப்புகளும் குறைந்தன.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
இதற்கிடையில், கடந்த 2015ல் வடகிழக்கு பருவ மழையால் மதுராந்தகம் ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 530 மில்லியன் கனஅடி மட்டுமே சேமிக்க முடிந்தது. இதையொட்டி, மதுராந்தகம் ஏரியை புனரமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று கொண்ட தமிழக அரசு, கடந்த பிப்ரவரி மாதம் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி புனரமைக்க நபார்டு வங்கியின் கடனுதவி மூலம் 120 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை நிதியாக ஒதுக்கியது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
இந்த நிதியை கொண்டு மதுராந்தகம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தி 3950 மீட்டர் நீளமுடைய கரைகள் பலப்படுத்தப்படுகிறது. ஏரியை ஆழப்படுத்தும்போது, அதில் அள்ளப்படும் மண் எதிர்புறத்தில் உள்ள 1482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்தப்படுகிறது. வரத்து கால்வாய்கள் மற்றும் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது. 6 கலங்கல்களின் மட்டத்தை 50 செ.மீ உயர்த்தி, ஏரியின் கொள்ளளவை 530 மில்லியன் கனஅடியில் இருந்து 791 மில்லியன் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. ஏரியின் கரை அருகே 1650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக உயர்த்தப்படும் மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு...!
 
இதன் மூலம், ஏரியின் கரை 31.65 மீட்டர் உயரத்தில் இருந்து 32.15 மீட்டராக உயர்த்தப்படுகிறது. ஏரியின் கொள்ளளவை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் நீர் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இப்பணிக்காக நீர்வளத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 21 ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து, அடுத்தாண்டு ஜனவரி முதல் மதுராந்தகம் ஏரியின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மிக வறட்சியான காலங்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு, இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget