மேலும் அறிய

" உயிர் போனாலும், நிலத்தை விட மாட்டோம் " - படையெடுத்த கிராம மக்கள்.. பரந்தூர் விமான நிலையம் நிலை என்ன ? 

நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் விமான நிலைய திட்ட நிலம் எடுப்பு அலுவலகத்தில் ஆட்சேபனை மனு வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வந்தது.

 


தொடர் போராட்டம் 

விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று கூடி 791 வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

 


 

தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தற்பொழுது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நாளிதழ்களில் இன்று வெளியிட்டு உள்ளது. ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள் சர்வே எண்கள் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.

நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனைத் தொடர்ந்து ஏகாம்பரம் கிராம கிராமத்தில் இரண்டாவது கட்டமாக 234 ஏக்கர் பரப்பளவில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகிறது ‌. 

 

படையெடுத்த கிராம மக்கள்

இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உனள்ளது. அறிவிப்பு வெளியான போது ஏகனாபுரம் கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரை பகுதியில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகம் மண்டலம் என்ற இரண்டில், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நிலம் வழங்க மாட்டோம் என ஆட்சேபனை மனுக்களைவழங்கி வருகிறார்கள். கிராம மக்கள் வருகையை ஒட்டி காரை பகுதியில் உள்ள நிலை எடுப்பு அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கிராம மக்களின் ஒரே குறிக்கோள், ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்பதுதான். ஏற்கனவே விமானம் அமைப்பதற்கு பன்னூர் பகுதி உகந்த இடமாக உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் விமான நிலையத்தால் பாதிப்படைகின்றன. ஆனால் பன்னூர் பகுதியில் 250 குடியிருப்பு பகுதிகள் தான் பாதிப்படைவதாக அரசை கூறுகிறது. எனவே எங்கள் நிலத்தில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Tvk Vijay maanadu: முதல் மாநாடிற்கு சுவர் விளம்பரத்தில்  தெறிக்கவிடும் திருவண்ணாமலை  தவெகவினர்.!
Tvk Vijay maanadu: முதல் மாநாடிற்கு சுவர் விளம்பரத்தில் தெறிக்கவிடும் திருவண்ணாமலை தவெகவினர்.!
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
Embed widget