மேலும் அறிய

மக்களே உஷார் !! சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு !! சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மூன்று வாரங்களாக தொடர்ந்து அதிகரிப்பு - அமைச்சர் சுப்பிரமணியன்

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன 

டெங்கு வைரஸ் தொற்று என்பது ஒரு மோசமான காய்ச்சலை கொண்ட நோயாகும். இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவும் வைரஸால் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ;

1.திடீர் காய்ச்சல் அல்லது குளிர்

2. தலைவலி , குறிப்பாக தலையின் முன்புறம் அல்லது கண்களுக்குப் பின்னால் வலி.

3. தசை மற்றும் மூட்டு வலி

4. சோர்வு 

5. வயிற்று வலி , குமட்டல் அல்லது வாந்தி

அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த 4 முதல் 10 நாட்களுக்குப் பிறகு தோன்றும் அல்லது 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் குணமடைவார்கள். சில நேரங்களில் தொற்று மிகவும் தீவிரமாகவும், சில சமயங்களில் அது உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கும்.

வடகிழக்கு பருவ மழை - ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து , சேவை துறைகளுடன் ஆலோசனை கூட்டம் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மலேரியா - டைபாய்டு பாதிப்பு பரவல்

காய்ச்சல் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உள்ளது. அதே நேரம் , சென்னை , ராமநாதபுரம் , கன்னியாகுமரி , துாத்துக்குடி மாவட்டங்களில் , மலேரியா பாதிப்பு காணப்படுகிறது எனவும் , திருச்சி , தஞ்சாவூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் டைபாய்டு காய்ச்சல் அதிகம் காணப்படுகிறது.

சென்னை , திருச்சி , விழுப்புரம் , செங்கல்பட்டு , திருப்பத்துார் , ஈரோடு , தஞ்சாவூர் , கோவை , நாமக்கல் மாவட்டங்களில் , கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிவப்பு மண்டலம்

சென்னை, திருவள்ளூர், கோவை, கடலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் , சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

தமிழகத்தில் இந்தாண்டில் 22 பேர் 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் எல்லாம் நாய்க் கடிக்கு பின், முறையான சிகிச்சை பெறாமல், அலட்சியமாக இருந்ததால் ஏற்பட்ட விளைவு. இகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு படுத்துவதுடன் , காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் , துணை சுகாதார இயக்குநர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது ; 

வடகிழக்கு பருவ மழையையை ஒட்டி 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மழைக் காலங்களில் , வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில் , கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதில், 'ஏடிஸ்' வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் , மூன்று வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டில் இதுவரை, 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு பேர் இறந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பாதிப்பு அதிகமாகி உயிரிழந்துள்ளனர் என இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget