மேலும் அறிய

Navratri : வடபழனி முருகன் கோவிலில் நாளை நவராத்திரி நிறைவு விழா..! சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு..!

பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கொலு அமைக்கப்பட்டு நடைபெற்று வரும் நவராத்திரி விழா நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

சென்னையில் பிரபலமான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது.
 
இந்த வருடம் கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலு துவக்க விழா அன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் ஆதிமூலம், துணைக் கமிஷனர் முல்லை மற்றும் பொதுமக்கள் சார்பில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இசை கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கொள்கின்றனர். தினமும் அனைத்து பக்தர்களுக்கும் 108 முருகன் கோயில் விவரம் அடங்கிய புத்தகம் அம்மன் கோயில்கள் விவரம் அடங்கிய புத்தகம் முருகர் படம்,அம்மன் படம் விபூதி குங்குமம் என அனைத்தும் வைத்து முதலில் வரும் 250 நபர்களுக்கு கொலு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த நவராத்திரி கொலுவின் முக்கிய அம்சமாக கையினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், கந்த புராணம் வரலாறு, கீதா உபதேச காட்சி, சீதா கல்யாணம், திரௌபதி சம்ரோக்ஷணம், காமாட்சியம்மன் ஊஞ்சல், நவ துர்கை அம்மன், அறுபடை வீடு முருகன் என அனைத்தும் கொலுவின் முக்கிய அம்சமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள முக்கியமான சக்தி பீடங்களில் சில புகைப்படங்களை இங்கே கொலுவில் புகைப்பட தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது.
 
சக்தி கொலு சிறப்புகள்: சக்தி கொலுவில் எங்கும் இல்லாத வகையில் ஒவ்வொரு பொம்மைகளின் காட்சிகளை பற்றிய விளக்கங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தின் வழக்கங்கள், கடவுள் உருவங்கள் பல ரூபங்களில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. அதனை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் விதத்தில் ஏராளமான தகவல்கள் சக்தி கொலுவில் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் அதில் எழுதப்பட்ட தகவல்களை படித்து அதனை பற்றி தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது. மேலும், அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ள சில அரிதான காட்சி பொம்மைகள் எந்த வரிசையில் எந்த படியில் இருக்கிறது என்ற விவரம், தமிழக முருகன் கோயில்களின் விவரமும் தனித்தகவலாக இங்கு வைக்கப்பட்டுள்ளது.
 
நிகழ்சிகள்: நவராத்திரி விழாவில் தினமும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை, 108 நபர்கள் கொண்ட குழுவினரால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5:30 மணி முதல் மாலை 6 மணிவரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது. காலை 11 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 6:30 மணிவரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 6:30 மணி முதல் 7 மணிவரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நடக்கிறது. இரவு 7 மணிக்கு இசைக் கச்சேரி, நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Embed widget