மேலும் அறிய

Navratri : வடபழனி முருகன் கோவிலில் நாளை நவராத்திரி நிறைவு விழா..! சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு..!

பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கொலு அமைக்கப்பட்டு நடைபெற்று வரும் நவராத்திரி விழா நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

சென்னையில் பிரபலமான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது.
 
இந்த வருடம் கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலு துவக்க விழா அன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் ஆதிமூலம், துணைக் கமிஷனர் முல்லை மற்றும் பொதுமக்கள் சார்பில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இசை கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கொள்கின்றனர். தினமும் அனைத்து பக்தர்களுக்கும் 108 முருகன் கோயில் விவரம் அடங்கிய புத்தகம் அம்மன் கோயில்கள் விவரம் அடங்கிய புத்தகம் முருகர் படம்,அம்மன் படம் விபூதி குங்குமம் என அனைத்தும் வைத்து முதலில் வரும் 250 நபர்களுக்கு கொலு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த நவராத்திரி கொலுவின் முக்கிய அம்சமாக கையினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், கந்த புராணம் வரலாறு, கீதா உபதேச காட்சி, சீதா கல்யாணம், திரௌபதி சம்ரோக்ஷணம், காமாட்சியம்மன் ஊஞ்சல், நவ துர்கை அம்மன், அறுபடை வீடு முருகன் என அனைத்தும் கொலுவின் முக்கிய அம்சமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள முக்கியமான சக்தி பீடங்களில் சில புகைப்படங்களை இங்கே கொலுவில் புகைப்பட தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது.
 
சக்தி கொலு சிறப்புகள்: சக்தி கொலுவில் எங்கும் இல்லாத வகையில் ஒவ்வொரு பொம்மைகளின் காட்சிகளை பற்றிய விளக்கங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தின் வழக்கங்கள், கடவுள் உருவங்கள் பல ரூபங்களில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. அதனை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் விதத்தில் ஏராளமான தகவல்கள் சக்தி கொலுவில் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் அதில் எழுதப்பட்ட தகவல்களை படித்து அதனை பற்றி தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது. மேலும், அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ள சில அரிதான காட்சி பொம்மைகள் எந்த வரிசையில் எந்த படியில் இருக்கிறது என்ற விவரம், தமிழக முருகன் கோயில்களின் விவரமும் தனித்தகவலாக இங்கு வைக்கப்பட்டுள்ளது.
 
நிகழ்சிகள்: நவராத்திரி விழாவில் தினமும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை, 108 நபர்கள் கொண்ட குழுவினரால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5:30 மணி முதல் மாலை 6 மணிவரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது. காலை 11 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 6:30 மணிவரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 6:30 மணி முதல் 7 மணிவரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நடக்கிறது. இரவு 7 மணிக்கு இசைக் கச்சேரி, நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget