மேலும் அறிய

நிரம்பி வழிந்த காஞ்சி மாநகரம்.. ஏசி பஸ்ஸில் கூட தொங்கிச் சென்ற பயணிகள்.. எதற்காக இந்த கூட்டம்?

kanchipuram bus stand : சென்னை, தாம்பரம் ,வேலூர், வந்தவாசி ,செய்யாறு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து முகூர்த்த நாள் மற்றும் வாத இறுதி நாள் காரணமாக ஏராளமான பயணிகள் பாஸ் நிலையத்தில்  குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல். சென்னை, தாம்பரம் ,வேலூர், வந்தவாசி ,செய்யாறு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
 
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாள்
 
தமிழ்நாடு முழுவதும் இன்று முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாள் இருப்பதால், ஏராளமான பொதுமக்கள் திருமண விழாவில் பங்கு கொள்வதற்கும், பிற பயணங்கள் செய்வதற்கும், நேற்று மாலை முதலே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குவிய தொடங்கினர். இதன் காரணமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புறப்பட்ட பெரும்பாலான பேருந்துகள் கூட்ட நெரிசலுடனே காணப்பட்டது. பேருந்து முழுவதுமாக பயணிகளால் நிரம்பி வழிந்தன. 
 
பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் ஒரு பகுதி - kanchipuram bus stand
பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் ஒரு பகுதி - kanchipuram bus stand
 
 
நிரம்பி வழிந்த காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ( kanchipuram bus stand )
 
சென்னை, தாம்பரம் , வேலூர் வந்தவாசி ,செய்யாறு,  செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அதேபோன்று போதிய பேருந்துகள் இல்லாததால், அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்துடன் பயணம் செய்ய வந்த நபர்கள் பெரும்பாலானோர் பல பேருந்துகளில் ஏற முடியாமல் தவித்தனர். பலரும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி சென்ற காட்சிகளையும் காண முடிந்தது.
பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் ஒரு பகுதி - kanchipuram bus stand
பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் ஒரு பகுதி - kanchipuram bus stand
 
விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களின் பொழுது, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், இந்தநிலை தொடர்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பயணிகள் சிலர் தெரிவிக்கையில், சில பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில ஊர்களுக்கு பேருந்துகளில் இயக்கப்படுவது கிடையாது. எந்த ஊர்களுக்கு பேருந்து தேவைப்படுகிறதோ, அது குறித்து முன்கூட்டியே ஆராய்ந்து, அதற்கு ஏற்றார்போல் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
 
பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் ஒரு பகுதி - kanchipuram bus stand
பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் ஒரு பகுதி - kanchipuram bus stand
 
போக்குவரத்தில் நெரிசலில் சிக்கிய காஞ்சி மாநகரம்
 
காஞ்சிபுரத்தில் அனைத்து திருமண மண்டபங்களிலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், காஞ்சிபுரம் மாநகரை நோக்கி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் எண்ணிக்கை இயல்பை விட அதிகரித்தது. இதன் காரணமாக சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், மார்க்கெட் பகுதி, காந்தி ரோடு ,தேரடி, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள், வெளியேறுவதற்கும் இந்த போக்குவரத்து நெரிசல் பெரும் தடையாக இருந்தது.
 
பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் குளிர்சாதன பேருந்து
பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் குளிர்சாதன பேருந்து
காவல்துறையினரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக எந்தவித குற்ற சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget