மேலும் அறிய

Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்

இதர மாநிலங்களில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநரால் வெளியே செல்ல முடியுமா? சட்டப்பேரவைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு இல்லை என்றும் விமர்சனம்.

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "சட்டப்பேரவையில் காரணமே இல்லாமல் ஆளுநர் வெளியேறியது அநாகரிகமான அணுகுமுறை. அவர் சட்டசபைக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம். இதேபோல் கர்நாடகா போன்ற இதர மாநிலங்களில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநரால் வெளியே செல்ல முடியுமா? சட்டப்பேரவைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் யாராலும் நீண்ட காலமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது. இது போன்ற சம்பவங்களில் குற்றம் வெளிவரும்போது உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்ற கோணத்தில் தான் இந்த வழக்கையும் நீதிமன்றம் அணுகியுள்ளது. இதேபோல், அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தையும் தமிழக அரசு மூடி மறைக்கவே முயற்சிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக தற்போது குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள் கூட பொள்ளாச்சி சம்பவத்தில் கூட தற்போது வரை நடவடிக்கை இல்லை. அனைத்து பிரச்சனைகளையும் அரசு காலம் தாழ்த்தி அப்படியே விட்டுவிடுகிறது என்றார். 

Seeman:

புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் "திராவிடம் நல் திருநாடு" எங்கு இருக்கிறது? நான் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி புரட்சி பாவலன் பாடிய பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிப்பேன். அந்த நிகழ்ச்சியில் தான் அரசியல் பேசியதை விட திமுக அமைச்சர்கள் தான் முழுக்க முழுக்க அரசியல் பேசினர். ஆனால் நான் பேசியதற்கு மட்டும்தான் கண்டனம் எழுந்துள்ளது. நான் பேசி கண்டனம் வரவில்லை என்றால், நான் ஏன் பேச வேண்டும்? நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.

திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்ல தகுதி இல்லை. தமிழ்நாட்டில் நியாயம் கேட்டு போராடுவதற்கு கூட யாருக்கும் அனுமதியில்லை. சுதந்திரப் போராட்டத்தின் போது போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றாலும், போராடும் உரிமையாவது இருந்தது. ஆனால் தற்போது அதுவும் இல்லை. கருப்பு என்றால் ஏன் உங்களுக்கு வெறுப்பு? உங்கள் கட்சி கொடியிலிருந்து கருப்பை எடுத்து விடுவீர்களா? நீட் தேர்வு சோதனைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்றார். 

Seeman:

கூட்டணி தர்மத்திற்காக கூட்டணி தலைமையை அனுசரிக்க வேண்டி திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைதியாக உள்ளனர். மீறி பேசினால் கண்டிப்பாக கூட்டணி களையும். நூறாவது சுதந்திர ஆண்டை தொடப்போகும் இந்தியாவில் தற்போது வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். 

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் போட்டியிடும் என தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பின் மதிப்பு குவாட்டர் விலை கூட இல்லை என விமர்சித்தார். 

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது குறித்த கேள்விக்கு, இந்த நாற்காலியில் அமர்ந்து பாருங்கள் அப்போதுதான் அது தெரியும். கட்சியில் கட்சிக்காக இருப்பவர்கள் மட்டும்தான் இங்கு இருக்க முடியும். தான் தான் கட்சி என்று இருப்பவர்களால் நிலைத்திருக்க முடியாது. நான் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி இருக்கும்" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget