மேலும் அறிய

ராணிப்பேட்டை : டாஸ்மாக்கை துளையிட்டு கொள்ளையடித்த குடிப்பிரியர்கள்! போலீசார் தீவிர விசாரணை!

மதுபான கடைகளின் தொடர் மூடலை சிறிதும் எதிர்பார்க்காத குடி பிரியர்கள் , கள்ளத்தனமாக விற்கப்படும் வெளிமாநில மதுபானங்கள் தொடங்கி உள்ளூர் சாராய வகைகள் வரை  தேடி அலைகின்றனர்.


ராணிப்பேட்டை : டாஸ்மாக்கை துளையிட்டு கொள்ளையடித்த குடிப்பிரியர்கள்! போலீசார் தீவிர விசாரணை!

தமிழ் நாட்டில்  கொரோனா பாதிப்பு மிக தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடத்த  மே மாதம் 10-ஆம் தேதி ஆரம்பித்து,  கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியது  புதிதாக பதவியேற்ற திமுக அரசு. இதில்  ஒரு பகுதியாக தமிழகத்தில் மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் மூடும்படியும் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகம்  மற்றும் மருத்துவ துறையின் தீவிர முயற்சியால் மாவட்டம் தோறும் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது .


ராணிப்பேட்டை : டாஸ்மாக்கை துளையிட்டு கொள்ளையடித்த குடிப்பிரியர்கள்! போலீசார் தீவிர விசாரணை!

கொரோனா நோய் தொற்று மெல்ல குறைந்து வரும் சூழ்நிலையில் , கடந்த திங்கட்கிழமை அன்று தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து அதன் மூலம் காய்கறி , மளிகை பொருட்கள் , சிறு அங்காடிகள் , அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள்  அணைத்தும் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று அறிவித்திருந்தது. எனினும் தமிழ் நாட்டில் இன்னும் மது கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை . மதுபான கடைகளின் தொடர் மூடலை சிறிதும் எதிர் பார்க்காத குடி பிரியர்கள் , கள்ளத்தனமாக விற்கப்படும் வெளிமாநில மதுபானங்கள்  தொடுங்கி உள்ளூர் சாராய வகைகள் வரை  தேடி அலைவதும் , வீட்டில் இருந்தபடியே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பார்த்து, குக்கர் மற்றும் இதர வீடு உபயோக பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சாராயம் தயார்செய்வது  உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடிப் பிரியர்களின் விபரீத முயற்சிகளால் ஆங்காங்கே மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, பூட்டி இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளின் பூட்டை உடைத்தும், சுவற்றை துளைபோட்டு  மதுபானங்களை கொள்ளையடிக்கும் துணிகர குற்ற சம்பவங்களும் மாவட்டங்களில் அதிகரித்து  வண்ணம் உள்ளது  . 


ராணிப்பேட்டை : டாஸ்மாக்கை துளையிட்டு கொள்ளையடித்த குடிப்பிரியர்கள்! போலீசார் தீவிர விசாரணை!

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள  ஒரு  அரசு டாஸ்மாக் கடையில் இதுபோன்ற ஒரு துணிகர கொள்ளை நடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த தென்னந்தியலம் மாவட்டத்திலுள்ள அரசு டாஸ்மாக் (கடை எண் 11368)  கடையை , நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் , டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்ட  மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் , மதுபான கடையின் சுவற்றைத் துளைபோட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து ரத்தினகிரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு  விரைந்து வந்த போலீசார், அந்த கடையின்  மேற்பார்வையாளர்  ஸ்ரீதர் மற்றும் விற்பனையாளர் சார்லஸ் ஆகியோரை அழைத்து கடையை திறக்க செய்து மதுபானங்கள் திருடப்பட்டுள்ளதா என்று  விசாரணை மேற்கொண்டனர் .


ராணிப்பேட்டை : டாஸ்மாக்கை துளையிட்டு கொள்ளையடித்த குடிப்பிரியர்கள்! போலீசார் தீவிர விசாரணை!

விசாரணையில் 15 கேஸ் உயர் ரக மதுபான பாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம்  எனவும் அக்கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த ரத்தினகிரி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விசாரணையின்போது ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் உடனிருந்தனர் .

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழையும் போர்டு.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழையும் போர்டு.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
தலைமைச் செயலகம் மாறுகிறதா? கோயம்பேட்டில் மெகா பிளான்... இனிமேல் இப்படி மாறப்போகிறதா?
தலைமைச் செயலகம் மாறுகிறதா? கோயம்பேட்டில் மெகா பிளான்... இனிமேல் இப்படி மாறப்போகிறதா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Embed widget