மேலும் அறிய

அடுத்தாண்டு தொடக்கத்தில் 2ஆம் கட்ட மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கும் - அமைச்சர் சேகர் பாபு

சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 95 சதவீதம் முடிவு பெற்றிருக்கின்றன.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் தனியார் மருத்துவமனையின் மூலமாக கட்டணமில்லா பொது மருத்துவ முகாம்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கொளத்தூர், வேல்முருகன் நகர், ராஜாஜி நகரைச் சேர்ந்த காமராஜர் தெரு, ஜெய்பீம் நகர் 1வது தெரு, ராஜா தெரு சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் பொது மருத்துவ முகாம்களை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து, பார்வையிட்டதோடு, மருத்துவ சிகிச்சை பெற்றவர்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சிக்கு பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், “மழைக்கு பிறகு ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு பிரச்சனைகள் இல்லாத மண்டலத்திலிருந்து சூப்பர் சக்சன் போன்ற அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு,  சரி செய்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருவிக நகர் சட்டமன்ற தொகுதி மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு 30 கொசு தெளிப்பான் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் நீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் அறிவுறுத்தியபடி நேற்று முன்தினம் சென்னை பெருநகர மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து 200 இடங்களில் சுமார் 82,000 பயனாளிகள் பயன்பெற்ற சிறப்பு மருத்துவ முகங்களை நடத்தியது.  அதன் தொடர்ச்சியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் முதல் தினந்தோறும் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள்  நடைபெறுகின்றன. சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாம்களிலே பயனடைந்துள்ளார்கள்.
 
சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 95 சதவீதம் முடிவு பெற்றிருக்கின்றன. ஒரு சில இடங்களில் இணைப்பு கால்வாய்களைத்தான் ஏற்படுத்த வேண்டும். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் கட்டுகின்ற பணிகளை சென்னை மாநகராட்சி துவங்க இருக்கின்றது. வருகின்ற 9ம் தேதி பெருமழை வந்தால் அதை எதிர்கொண்டு, மக்களுக்கு எவ்வித உபத்திரம் இல்லாமல் பாதுகாக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கிருந்ததோ அங்கே எல்லாம் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. அவை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அகற்றாமல் இருப்பதற்கு உத்தரவிடப்டுள்ளது. மேலும் மின்மோட்டார்கள் தேவையென்றாலும் அதற்கும் தயாராக உள்ளோம். போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏழ்மையானவர், வசதியானர் என்ற பாகுபாடு இல்லாமல் சமூக நீதியின் அடிப்படையில் சுமார் 2.5 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை(இன்று) முதல் கொசுவலை வழங்கப்பட உள்ளது.
 
ஆர். எஸ்.எஸ்,  இயக்கம் நீதிமன்றத்தை அணுகுகின்றபோது, தமிழக அரசை பொறுத்தளவில் நீதிமன்றத்தில் என்னென்ன கருத்துக்களை முன்வைக்க வேண்டுமோ அவற்றை எடுத்து வைக்க தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் தனது நேரடி கட்டுப்பாட்டில் மேற்கொண்டு, தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக இருப்பதற்கு  தனது அனுபவ திறமையால் அனைத்து நடவடிக்கைளையும் எடுப்பார்” என்று கூறினார்.
 
 
 
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget