“பல்டி பழனிசாமி” தினந்தோறும் ஒவ்வொரு கருத்துக்கள் - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
ஒவ்வொரு நாளும் மாறி மாறி கருத்துக்களை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பதாகவும் பல்டி பழனிசாமி என்றும் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

அன்னம் தரும் அமுத கரங்கள்
சென்னை புளியந்தோப்பு மற்றும் கன்னிகாபுரம் பகுதியில், அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு;
கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு ?
அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எங்கே போனது அந்த வாக்குறுதி. முதல்வர் குறித்து ஒருமையில் பேசுவது எதிர்க்கட்சித் தலைவரின் தரத்தை காட்டுகிறது. அடிமை இயக்கம் யார் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியும். தினந்தோறும் ஒவ்வொரு நாளும் பிரச்சார பயணத்தில் ஒவ்வொரு விதமான கருத்துக்கள். தனித்தே ஆட்சியைப் பிடிப்போம் என்பது ஒருநாள் கருத்து , அடுத்த நாள் கருத்து , நான் யாருமில்லாமல் தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பேன் என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பது அடுத்த நாள் கருத்து பாஜகவில் அமித்ஷா எடுக்கின்ற முடிவு தான் இந்த கூட்டணியின் முடிவு என்று அவர்களுடைய கருத்து இவர்களுடைய கருத்து அடுத்த நாள் நாங்கள் எடுக்கின்ற முடிவு நாங்கள் தான் இந்த கூட்டணிக்கு தலைமை என்று நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்கின்ற புலவர் பெருமானாக இன்றைக்கு பல்டி பழனிசாமி தினம்தோறும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகிறார்.
புளிச்ச பயணம் , தீர்வில்லாத பயணம்
அண்ணாமலைக்கு தோல்வியே திமுக தந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகம் தமிழை வளர்த்தது தமிழ் ஆன்மீகத்தை வளர்த்தது இதில் மாற்று கருத்து இல்லை. ஆன்மீகம் தமிழ் இரண்டும் ஒன்றாக கலந்தது தான். எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப் பயணம் புளிச்ச பயணம். மக்களோடு இருக்கின்ற முதல்வர் தினம் தோறும் ஒரு திட்டங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒட்டுமொத்த திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்ல முடியாது மக்களுடைய தேவைகளை அறிந்து தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திட்டங்களையும் கொண்டு செல்ல முடியும் மக்களுடைய தேவைகளை அறிந்ததால் தான் இன்றைக்கு தினம் தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகளை கொண்ட உங்களுடன் முதல்வர் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் பயணம் தீர்வில்லாத பயணம் என்றார்.




















