மேலும் அறிய

தனியாக செல்லும் சிறுவர்களை குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்

சிறுவர்களிடம் நைசாக பேசி கடத்தி , பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் இரவு டியூசன் முடிந்து வீடு செல்ல தனிமையில் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் சிறுவர்களை குறி வைத்து நைசாக பேசி அழைத்து இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்லும் மர்ம நபர்கள் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார்கள் எழுந்தது

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி போலீஸாரிடம் புகாரளிக்காமல் தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு டியூசன் முடிந்து சொந்த ஊரான திங்கள் சந்தை பகுதிக்கு செல்ல குளச்சல் வி.கே.பி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்து நின்ற சிறுவனை மர்ம நபர் ஒருவர் நைசாக பேசி இருசக்கர வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்று ஆள் நடமாட்டமில்லாத கடற்கரை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

மர்ம நபரின் பிடியில் இருந்து தப்பிய திங்கள் சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதான அந்த சிறுவன் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் தைரியமாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையடுத்து சிறுவனிடம் மர்ம நபரின் அடையாளங்களை கேட்டறிந்த போலீஸார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் மர்ம நபர் கொண்டு வந்த பைக்கை அடையாளம் கண்டு பைக்கின் உரிமையாளரான பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த 39 வயது மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கழுத்தை நெரித்து கொடுமை

விசாரணையில் குளச்சல் பகுதியில் பேருந்துக்காக காத்து நின்ற அந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிய மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் சிறுவனை இரவு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத கூட்டுமங்கலம் கடற்கரை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் ஒத்துழைக்காத சிறுவனை கழுத்தை நெரித்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் அதன் பின் சிறுவன் அருள் ஆன்றோ சஜின் பிடியில் இருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது.

மேலும் 5 க்கும் மேற்பட்ட சிறுவர்களை இதுபோன்று அழைத்து கடத்தி சென்று அதே பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள அருள் ஆன்றோ சஜினுக்கு கோட்டார் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்னது அவரிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்றதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அருள் ஆன்றோ சஜின் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் மகளிர் போலீஸார் அருள் ஆன்றோ சஜினை கைது செய்து சிறையிலடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
Embed widget