மேலும் அறிய

சென்னை ; வீட்டில் சபரிமலை பூஜையில் கத்தியுடன் புகுந்த நபர் !! அதிர்ச்சி பிண்ணனி

பெண்களை இடித்து வீட்டில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ; வீட்டில் சபரிமலை பூஜையில் கத்தியுடன் புகுந்த நபர் !! அதிர்ச்சி பிண்ணனி

சென்னை ஜாபர்கான்பேட்டை கன்னியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் அருண்குமார் ( வயது 40 ) என்பவர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து கடந்த 07 ம் தேதி அன்று இரவு வீட்டில் ஐயப்ப பூஜை நடத்தி கொண்டிருந்ததாகவும் , அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து பெண்களை இடித்துக் கொண்டு அங்குமிங்கும் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அருண்குமாரின் மாமா சுகுமார் என்பவர் கணேஷிடம் ஏன் இவ்வாறு பூஜை சமயத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடக்கிறாய் என கேட்ட போது கணேஷ், சுகுமாரை கன்னத்தில் அறைந்ததாகவும் , சத்தம் கேட்டு தடுக்க வந்த அருண்குமாரையும் கணேஷ் தகாத வார்த்தைகளால் பேசி , தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காட்டி மிரட்டி அருண்குமார் வைத்திருந்த பணம் ரூ.500 பறித்துக் கொண்டு வெளியே சென்ற போது அங்கிருந்த நபர்கள் அவரை பிடிக்க முற்படவே அந்த நபர் வெளியே சென்று அங்கு கடையிலிருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களை தரையில் வீசி ரகளை செய்து தப்பிச் சென்றுள்ளார்.

அருண்குமார் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ் ( வயது 36 ) என்பவரை கைது செய்தனர்.  

அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கணேஷ் குமரன் நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 2 கொலை, 2 கொலை முயற்சி உள்பட சுமார் 19 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கணேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது. சுமார் 3 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்.

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தண்டையார்பேட்டை இரயில் நிலையம் அருகே கண்காணித்து அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த பெண் உட்பட 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து சோதனை செய்த போது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ( வயது 45 ) , மற்றும் மோகனா ( வயது 24 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் விமல் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
" மக்கள் நூலகம் திறப்பு " மாணவர்கள் , இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதை !!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
TN 5 New Trains: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Embed widget