காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டருக்கு எதிராக , மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

பத்திரம் அடமானம் - விசாரணை
சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் மயிலாப்பூரை சேர்ந்த விஜயகிருஷ்ணன் என்பவர் தன் மாமனார் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து , ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அடமானமாக வைத்த சொத்து பத்திரங்களை வேணுகோபால் திருடி விட்டதாக , விஜயகிருஷ்ணன், புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி வேணுகோபாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
காவல் நிலையத்தில் மிரட்டியதாக புகார்
விசாரணைக்கு ஆஜரானபோது , சொத்து பத்திரங்களை விஜயகிருஷ்ணணிடம் திருப்பி கொடுக்கும்படி , புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி , எஸ்.ஐ ஷிஜிபா ஆகியோர் மிரட்டியதாக , மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேணு கோபால் புகார் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்ஸ்பெக்டர் ரவி , எஸ்.ஐ., ஷிஜிபாவுக்கு தலா , 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், இருவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரித்துரைந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த உத்தரவை நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதிகள் எம். சுந்தர் , ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தாப்பில் வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் ஆஜராகி , விஜயகிருஷ்ணன் அளித்த புகாரின் உண்மை தன்மையை விசாரிக்கும் நோக்கில் மட்டுமே வேணுகோபால் காவல் நிலையம் அழைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு ;
விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது. விசாரணையின் போது புகார்தாரரான வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இன்ஸ்பெக்டர் ரவிக்கு எதிராக துறை ரீதியான நட வடிக்கை எடுக்கும் படி மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தந்து செய்யப்படுகிறது. அதே போல் ரூ.10,000 அபராதம் விதித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.





















