மேலும் அறிய

கோவளம் கடற்கரைக்கு மீண்டும் நீலக்கொடி! 5-வது ஆண்டாக சாதனை! சுத்தமான கடற்கரையின் ரகசியம் என்ன?

Kovalam Beach: "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, கோவளம் கடற்கரைக்கு மீண்டும் நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது"

"செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, கோவளம் கடற்கரைக்கு 5-வது ஆண்டாக இந்த முறை மீண்டும் நீலக்கோடி சான்று கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்"

மகிழ்ச்சியை கொடுக்கும் கடற்கரைகள் 

பொதுவாக கடற்கரைக்கு செல்வது என்பது பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. பொழுதுபோக்கிற்காகவும், மனது நிம்மதிக்காகவும் கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அவ்வாறு சுத்தமாக இருக்கும் கடற்கரைக்கு செல்வதற்கே பொதுமக்கள் அதிக அளவு விரும்புவார்கள். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு, 5-வது ஆண்டாக நீலக்கோடி சான்றிதழ் கிடைத்துள்ளது. 

நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன ?

உலகம் முழுவதும் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கு சிறப்பு வசதி அடிப்படையில் குறிப்பிட்ட சில கடற்கரைகள் தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்கின்ற கடற்கரைக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில் நீல கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நீல கொடி சான்றிதழ் வழங்கப்படும் கடற்கரைக்கு, சுற்றுலாப் பயணிகளிலேயே கூடுதல் வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக சர்வதேச அமைப்பு வாயிலாக, ஆண்டுதோறும் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்படும். ஆய்வுகள் நடத்தப்பட்டு, முறையாக அனைத்து விதிகளையும் பின்பற்றினால் நீல கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒருமுறை நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து சான்றிதழ் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவளம் நீலக்கொடி கடற்கரை - Kovalam Blue Flag Beach 

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது. நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக, கோவளம் பகுதியில் தனியாக கடற்கரையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதை எடுத்து அந்த கடற்கரையை அடிப்படையாக வைத்து, பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து, இந்த கடற்கரை தூய்மையாக பராமரித்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த கடற்கரைக்கு சான்றிதழ் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் ஐந்தாவது ஆண்டாக தற்போது மீண்டும் நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

10 கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெற திட்டம் 

தமிழகத்தில் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இது பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே இந்த கடற்கரைக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கூடுதலான நீலக் கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரையை உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் நான்கு இடங்களையும், கடலூரில் இரண்டு இடங்களிலும், விழுப்புரம் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தலா 1 இடங்களிலும் என மொத்தம் 10 கடற்கரைக்கு நீல கொடி சான்றிதழ் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget