மேலும் அறிய

தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

kilambakkam bus stand protest சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்கு பேருந்து கிடைக்காததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பேருந்துகள் இல்லாததால், கொசுக்கடியில் நடைமேடைகளில் படுத்து உறங்கி  வரும் பயணிகள்.

கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திரிசை தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடங்கியது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 


தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

முன் பதிவு

வார இறுதி நாள் என்பதால் சென்னையில் பணிபுரியும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக மற்ற பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஏற்றவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

லேசான தள்ளுமுள்ளு

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்ததால் கூடுவாஞ்சேரி சரக துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.


தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

இதனிடையே போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நடைமேடைகளில் படுத்து உறங்கி வருகின்றனர். வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் இந்த குழப்பம் நடைபெற்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 திடீர் கூட்டத்திற்கு காரணம் என்ன ?   

நாளை ஞாயிற்றுக்கிழமை தை மாதத்தில் வரக்கூடிய,  கடைசி  வளர்பிறை முகூர்த்தம்  என்பதால்,  கிட்டத்தட்ட அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமணம் நடைபெறுகிறது.  ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய வளர்பிறை முகூர்த்தம் என்பதால், அதிக அளவு திருமண  நாளை நடைபெற உள்ளது. இந்த திருமணங்களில் கலந்து கொள்வதற்காக,  பல்வேறு ஊர்களுக்கு நேற்று சென்னையில் இருந்து கிளம்பு துவங்கியுள்ளனர்.  


தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதே  பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.  இதன் காரணமாகவே நேற்று   பழக்கத்தை விட அதிக பயணிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  பொதுவாகவே முகூர்த்த நாள் உள்ளிட்ட நாட்களை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது  வழக்கம் என்றாலும்  இன்று இரவு  அதைவிட,  பொதுமக்கள் அதிகம் வந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.


தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

  பொதுமக்கள் கோரிக்கை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து இது போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.  இதற்கு முன்பு கூட ஒரு முறை பேருந்து சிறைபிடிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. எனவே இது போன்ற சிக்கலுக்கு தீர்வு காண நிர்வாக ரீதியாகவும்,  அறிவியல் பூர்வமாகவும் அணுக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.