மேலும் அறிய

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தாம்பரம் கமிஷனர் ஆபீஸ்..! இதுதான் காரணமாம்..

கிளாம்பாகத்தில் தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அமையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 393.74 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பணிகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. இதன் அடிப்படையில் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள், வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு பேருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தாம்பரம் கமிஷனர் ஆபீஸ்..! இதுதான் காரணமாம்..
 
தாம்பரம் மாநகராட்சி
 
சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை  ஆட்சி அமைந்த போது, தாம்பரம் தனி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, தாம்பரத்தில் கமிஷனர் அலுவலகமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தாம்பரம் கமிஷனர் அலுவலகம் தற்போது சோழிங்கநல்லூரில் தற்காலிக இடத்தில் செயல்பட்டு வந்தாலும், புதிய தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது, இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
 
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தாம்பரம் கமிஷனர் ஆபீஸ்..! இதுதான் காரணமாம்..
 
புதிய கமிஷனர் அலுவலகம்..
 
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த, வண்டலூர் கோட்டத்தில் அடங்கிய ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக மையப்பகுதியை அதிகாரிகள் தேர்வு செய்வதற்காக முடிவு செய்தனர். இதில், ஏற்கனவே வேங்கடமங்கலம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் கொண்ட புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் ஆய்வு  செய்துள்ளனர்.
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தாம்பரம் கமிஷனர் ஆபீஸ்..! இதுதான் காரணமாம்..
 
பேருந்து வசதிக்காக..
 
இந்நிலையில் பொதுமக்கள் புகார் கொடுப்பதற்கு ஏதுவாக பஸ் வசதி மற்றும் அனைத்து வசதிகளும் இல்லாததால் வேங்கடமங்கலம், கீரப்பாக்கம் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஒட்டியபடி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக, இடம் தேர்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில்  ஆய்வு நடத்தியுள்ளனர். இதன் அடிப்படையில், பொதுமக்கள் வந்து செல்வதற்கு சுலபமாக இருக்கும் கிளாம்பாக்கம் சுற்றுவட்ட பகுதியில், ஏதாவது ஒரு இடத்தில் புதிய தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் வண்டலூர் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget