மேலும் அறிய

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!

ஶ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கத்திற்காக போலியாக ஆவணம் தயாரித்து அரசு நிலத்தை நெடுஞ்சாலை திட்டத்தில் நில எடுப்பு தொகை 126 கோடி ரூபாய் அரசுக்கே விற்ற வழக்கில் 30 கோடி பெற்ற ஆசிஸ் மேத்ரா மற்றும் 3 கோடி பெற்ற செல்வம் இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் ₹200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.


காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
ஆனால், முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ₹200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழக நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டு தெரியவந்தது. இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். 

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம், பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.  காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில், மேலும், 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது. 

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
பல ஆண்டுகளுக்கு முன்பாக, அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக அவை இருந்துள்ளன. இதனால், அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
 

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
 இதில், வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என ஆராய, 6 வருவாய் துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையில், போலி பட்டா மூலம் யாருக்காவது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு பெற்றது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று 83 நபர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதில் 126 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 30 கோடி பெற்ற ஆசிஸ் மேத்ரா மற்றும் 3 கோடி பெற்ற செல்வம் இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் மாடுவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. போலி பட்டா பெறுவதற்கு அரசுத் துறையில் இருந்து யாராவது உதவினார்களா என்பது குறித்த விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மாநகராட்சி ஒப்பந்தங்களில் ரூ. 6 லட்சம் கோடி ஊழலா? - அன்புமணி இராமதாஸ் அதிரடி அறிக்கை!
மாநகராட்சி ஒப்பந்தங்களில் ரூ. 6 லட்சம் கோடி ஊழலா? - அன்புமணி இராமதாஸ் அதிரடி அறிக்கை!
சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் பயணிகள் கடும் அவதி!
சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் பயணிகள் கடும் அவதி!
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
Chennai MTC: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 520 புதிய ஏசி மினி பஸ்கள் -எம்.டி.சி-யின் மெகா பிளான்
Chennai MTC: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 520 புதிய ஏசி மினி பஸ்கள் -எம்.டி.சி-யின் மெகா பிளான்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
Trump Vs Iran IRGC: “சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
“சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
Iran Prez. Masoud Pledge: “தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
“தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
Car Sale Feb 2026: கொம்பனாக ஒசந்து நிக்கும் மாருதி .. ஷாக் அடிக்கும் டாடா.. விற்பனையில் மிரட்டிய கார் மாடல்கள்
Car Sale Feb 2026: கொம்பனாக ஒசந்து நிக்கும் மாருதி .. ஷாக் அடிக்கும் டாடா.. விற்பனையில் மிரட்டிய கார் மாடல்கள்
ADMK alliance Vs MK STALIN : யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அதிமுக, பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அதிமுக, பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
Embed widget