Kanchipuram Cylinder Blast: கேஸ் சிலிண்டர் குடோனில் பயங்கர தீ விபத்து..! 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. காஞ்சிபுரத்தில் சோகம்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் கேஸ் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று மாலை 6 மணி அளவில் பலத்த சத்தத்துடன் தீ பரவி உள்ளது. சிலிண்டர் குடோனுக்குள்ளே இருந்து பரவிய தீயானது மலவென, குடோனுக்கு வெளியேவும் பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக குடோன் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது. சம்பவம் நடைபெற்ற பொழுது 10 ஊழியர்கள் குடோனுக்குள்ளே இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீ விபத்தானது சுற்றி இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால், அப்பகுதி குடியிருப்பு பகுதியில் இருந்த, பொதுமக்களும் இந்த தீ விபத்தால் பலத்த காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட இதுவரை 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார மூலம் தீ பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இந்த கிராமம் உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களில் மின்வெட்டு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ,ஜீவா 50, பூஜா 22, நிவேதா 24, 12 வயது சிறுவன், சந்தியா 20, வடமாநிலத்தை சேர்ந்த இருவர் இதுவரை தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















