மேலும் அறிய

காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் - 2 பெண்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், படூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து செல்லும் போது விபத்து நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி சாலவாக்கம். இப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்குவாரி மற்றும் கல் அரவை நிலையங்கள் என 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு கல்குவாரிகள் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளது. இதில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான மூலப் பொருட்கள் சென்னை புறநகர் பகுதி மட்டுமில்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து 24 மணி நேரமும் கனரக லாரிகளால் மூலம் பல்வேறு வழித்தடங்கள் வழியாக எடுத்து செல்லப்படுகிறது.
 

காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் -  2 பெண்கள்  உயிரிழப்பு
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் பகுதியில் இருந்து, சாலவாக்கம் செல்லும் சாலை பிரிந்து செல்லும் சாலையில் இந்த வாகனங்கள் செல்வதால், சுற்றுச்சூழல் மட்டுமில்லாமல் வாகன விபத்திலும் பொதுமக்கள் சிக்கி உயிரிழந்தும் , உடல் உறுப்புகளை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ் வழித்தடத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளும் சொற்ப எண்ணிக்கையிலே செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் -  2 பெண்கள்  உயிரிழப்பு
 
இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து படூர் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று மாலை 4 மணி அளவில், உத்திரமேரூர் ஒன்றியம், அமராவதிப்பட்டினத்தை சேர்ந்த செல்வம், 41, என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். அரசு பேருந்து படூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சுமார் 20 பயணிகளுடன் பயணித்து வந்த நிலையில், சிறுமயிலூர் பகுதியில் நின்ற போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரி பேருந்து பக்கவாட்டில் உரசியபடியே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் , அரசு பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 

காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் -  2 பெண்கள்  உயிரிழப்பு
பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் , உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் இதை கண்டதும் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ், மூலம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் -  2 பெண்கள்  உயிரிழப்பு
விபத்தில் படூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றும் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புனிதா (51) என்பதும்,  மற்றொருவர் காஞ்சிபுரம் நகரில் வசித்து வரும் ரதி (21) என்பதும் தெரியவந்துள்ளது. விபத்துக் குறித்து சாலவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget