மேலும் அறிய

கையில் பட்டாகத்தி..! கடைகள், கண்ணில் பட்டவர்களை மிரட்டி பணம் பறித்த 4 பேர்..! பதைபதைத்த காஞ்சிபுரம்

4 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில், கஞ்சா போதையில் அட்டகாசம் செய்ததில் , பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை பல்வேறு இடங்களில், 4 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் வழிப்பறியில் பட்டாக்கத்தியுடன் ஈடுபட்டு, பணம் கொடுக்க மறுப்போரை கத்தியால் வெட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குள்ளப்பன் தெருவில் விமல் என்பர் வீட்டின் சிறிய அளவில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில், கடைக்கு வந்த 3 இளைஞர்கள் தண்ணீர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்குள் பட்டாகத்தியை காட்டி, அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

கையில் பட்டாகத்தி..! கடைகள், கண்ணில் பட்டவர்களை மிரட்டி பணம் பறித்த 4 பேர்..! பதைபதைத்த காஞ்சிபுரம்
 
இரண்டாவது சம்பவம்
 
இதேபோல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை, தேனம்பாக்கம் சாலை என பல்வேறு இடங்களில் சாலையில் வருவோரை பட்டாக்கத்தியால் , வெட்டி பணம் மட்டும் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன் , சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், காஞ்சிபுரம்  டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன், சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் ஆகிய 7 நபர்களும் ஒன்றன்பின் ஒன்றாக பலத்தை வெட்டு காயங்களுடன் கடும் ரத்தம் வெளியேறிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

கையில் பட்டாகத்தி..! கடைகள், கண்ணில் பட்டவர்களை மிரட்டி பணம் பறித்த 4 பேர்..! பதைபதைத்த காஞ்சிபுரம்
பலர் காவல் நிலையத்தில் தஞ்சம்
 
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து பல புகார் அளிக்க காவல் நிலையத்தில் குவிந்ததால் காவல் நிலையமும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக ரோந்து சென்று கொண்டிருந்த காவலர்களும் உஷாராகி, தீவிர கண்காணிப்பில் இரவில் கூடுதலாக காவலர்கள் வர வைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடக்கி விடப்பட்டன.

கையில் பட்டாகத்தி..! கடைகள், கண்ணில் பட்டவர்களை மிரட்டி பணம் பறித்த 4 பேர்..! பதைபதைத்த காஞ்சிபுரம்
 
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை உடனடியாக கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளைஞர்கள் பல்சர் பைக் சுற்றி தெரிந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காவலர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக செயல்பட்டதால், நரேஷ் மற்றும் சுரேஷ் என்ற இரு போதை இளைஞர்கள் பட்டாக்கத்தி,  இருசக்கர வாகனத்துடன் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
 
கஞ்சா போதையில் அட்டகாசம்
 
வெட்டுப்பட்ட நபர்களிடம் இது குறித்து கேட்டபோது, இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்ததாகவும், செல்போன்  மற்றும் பணம் கேட்டதாகவும், நாங்கள் பதில் சொல்வதற்குள், எங்களை பட்டா கத்தியால் தாக்கியதில் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம் செய்வதறியாது இருந்ததாக தெரிவித்துள்ளனர்.  மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களை பார்க்க வந்த உறவினர்கள் கூட பரபரப்பு உடனே காணப்பட்டனர்.‌ இதனால் மருத்துவமனை வளாகத்திற்குள்ளும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

கையில் பட்டாகத்தி..! கடைகள், கண்ணில் பட்டவர்களை மிரட்டி பணம் பறித்த 4 பேர்..! பதைபதைத்த காஞ்சிபுரம்
இது போன்ற துணிகர கொள்ளை மற்றும் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதிகளில், கஞ்சா கிடைப்பது மிக சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதாகவும், பள்ளி மாணவர்களுக்கு கூட கஞ்சா கிடைப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் துவங்கியிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .

தலைப்பு செய்திகள்

CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Embed widget