மேலும் அறிய

SI மகளை காதலித்த இளைஞர் ஆணவக் கொலை: தமிழகத்தில் அதிர்ச்சி! காங்கிரஸ் கண்டனம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக கங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SI மகளை காதலித்த இளைஞர் 

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் (26) இவர் நெல்லையை சேர்ந்த எஸ்.ஐ தம்பதியின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வரும் அந்த பெண்ணை கவின் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதால் இவர்களது பழக்கம் பெண்ணின் சகோதரனுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில், கேடிசி நகரில் உள்ள மருத்துவமனைக்கு வந்த கவினை பெண்ணின் தம்பி சுர்ஜித் வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் , பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பணியில் இருந்து சஸ்பெண்ட்

கவின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சுர்ஜித் பெற்றோரான காவல் அதிகாரிகள் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரும் இந்த கொலை வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் ; 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் , வேதனையும் அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக தொடரும் தலித் மக்கள் மீதான ஆணவப் படுகொலை நவீன சமூகத்திலும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. அறிவிலும் அறிவியலிலும் வளர்ச்சி அடைந்த 2025 ஆம் ஆண்டுகளிலும் விளிம்பு நிலை மக்கள் மீது நிகழ்த்தப்படும் இது போன்ற கொலை சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது. 

அரசை தலை குனிய செய்கிறது

கொலையாளியின் பெற்றோர் காவல் துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும்  வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.

ஒரே ஆண்டில் 7 ஆணவ படுகொலைகள்

விருதுநகர் அருப்புக்கோட்டையில் அழகேந்திரன், மதுரை திருமங்கலத்தில் திருமண தம்பதி, அவனியாபுரத்தில் கார்த்திக், ஈரோட்டில் சுபாஷ் என்பவரின் சகோதரி, சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் என தமிழகத்தில் ஆணவ படுகொலைகளின் பட்டியல் நீள்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏழு ஆணவ படுகொலைகள் நடந்துள்ளதாக சட்டப்படியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியல் மேலும் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசு இரும்புக்கரம் கொண்டு இத்தகைய கொலை செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும், 2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆணவக் கொலை மற்றும் கும்பல் படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு இந்த சட்ட மசோதாவை இன்று வரை சட்டமாக்காமல் கிடப்பிலே போட்டுள்ளது. அதே போல் ஆணவக் கொலை வழக்கில் நீதிபதி ராமசுப்பிரமணியம்  வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை ஒழிக்க நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை பள்ளி கல்லூரிகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி அறிவியல் உள்ளிட்ட பல வகைகளிலும் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் ஆணவ படுகொலைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
Embed widget