மேலும் அறிய

குரங்குகளை விஷம் வைத்துக்கொன்று பாலாற்றில் வீசிச்சென்ற மிருகங்கள்..!

மதுராந்தகம் அருகே விஷம் வைத்து குரங்குகளை கொன்று பாலாற்றில் வீசி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே  உள்ள மாமண்டூர் பாலாற்று படுகையில் 7  குரங்குகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குரங்குகளுக்கு உணவில் விஷம் வைத்து கொன்று அடையாளம் தெரியாத நபர்கள்  பாலாற்றில் வீசி சென்றுள்ளனர். பாலாற்று வழியாக மீன் வியாபாரம் செய்ய வந்தவர்கள் குரங்குகள் விசித்திரமாக சுற்றி திரிவதை கண்டுள்ளனர், மேலும் சில குரங்குகள், ஆங்காங்கே இறந்து விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர்.  குரங்குகள் உயிருக்கு போராடி இருந்ததை பார்த்து வனத்துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர்.

குரங்குகளை விஷம் வைத்துக்கொன்று பாலாற்றில் வீசிச்சென்ற மிருகங்கள்..!
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த 7 குரங்குளை மீட்டு பிரோத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்போது அந்த இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குட்டி குரங்கு ஒன்றை மீட்டு தற்போது குரங்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
மாமண்டூர் அருகே பாலாற்று பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குரங்குகளுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது யார். குரங்குகளை கொன்று பாலாற்றி வீசி சென்றது யார் என வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

குரங்குகளை விஷம் வைத்துக்கொன்று பாலாற்றில் வீசிச்சென்ற மிருகங்கள்..!
 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், உயிரிழந்துள்ள குரங்குகளை பார்க்கும்போது அவை இப்பகுதியை சேர்ந்த குரங்குகள் போல் தெரியவில்லை. வேறொரு இடத்தில் இருந்து விஷம் வைத்து கொலை செய்து விட்டு, இவ்விடத்தில் கொண்டு வந்து போடப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.
 

குரங்குகளை விஷம் வைத்துக்கொன்று பாலாற்றில் வீசிச்சென்ற மிருகங்கள்..!
 
இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குரங்குகளின் உயிரிழப்பு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்த பிறகே உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பதை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தனர்.

குரங்குகளை விஷம் வைத்துக்கொன்று பாலாற்றில் வீசிச்சென்ற மிருகங்கள்..!
 
முன்னதாக இதேபோல் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே பேகூர் கிராஸ் ரோட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி 60 குரங்குகள் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தன. குரங்குகளை விஷம் வைத்து கொன்றதாக ஹாசன் மாவட்டம் அருகே உகனி, கேதனஹள்ளியில் வசித்து வரும் ராமு, யசோதா, மஞ்சு, ராஜேகவுடா, ராமானுஜம் ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget