மேலும் அறிய

கரைய காத்திருக்கும் உப்பு; 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

ஊரடங்கால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு, குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் இயங்காததால் அதனை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லமுடியவில்லை.

ஊரடங்கு உத்தரவால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முடங்கி, 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முடங்கியதால், 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முடங்கியதால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

தமிழகத்தில் தூத்துக்குடி அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் மரக்காணம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றியுள்ள பகுதிகளில் தான் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 3000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் உப்பு தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள 1500 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்கள் வெயில் காலங்களில் மட்டும் தான் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. மழை காலங்களில் உப்பு உற்பத்தி நடப்பதில்லை இந்த உப்பு உற்பத்தி செய்யும் பணிகளில் மட்டும் சுமார் 1500 நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 250 குடும்பங்களுக்கு மேல் இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் டன் உப்பு உற்பத்தி ஆகும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். இங்கு உற்பத்தி செய்யப்படுகிற உப்புகள் இந்தியாவின் தென் மாநிலங்கள் முழுவதும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா வரை இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ உப்பு சாதாரணமாக கடைகளில் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உற்பத்தியாளர்களிடம் 80 பைசாவிலிருந்து 1.20 பைசா வரைக்கு மட்டுமே கொள்முதல் செய்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கரைய காத்திருக்கும் உப்பு; 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

இந்த உப்பு உற்பத்தி செய்வது மிகவும் கடினமான வேலை. வெயில் காலங்களில் வெயிலில் இருந்து தான் வேலை செய்ய முடியும். மற்ற வேலைகளை போல சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூட முடியாத ஒரு வேலை. உடலில் ஏதாவது ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டு போனால் கூட அந்த ஆண்டு முழுவதும் பணிக்கு செல்ல முடியாத சூழல் தான் இருக்கிறது. உப்பு நீரில் இறங்கி தான் வேலை செய்ய வேண்டும். காயங்கள் பட்ட இடங்களில் எரிச்சல் அதிகமாகும். இதனால் காயம் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

கரைய காத்திருக்கும் உப்பு; 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, லாரி, ரயில், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த ஊரடங்கால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் அதனை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லமுடியவில்லை. உப்பளத்தில் இருந்து வரப்புகளில் சேமித்து வைக்கப்பட்ட உப்பை அள்ளவும் தொழிலாளர்கள் இல்லை. இதனால் உப்பள வரப்புகளில் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் உப்பளங்களில் சுமார் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

கரைய காத்திருக்கும் உப்பு; 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் கூட்டுறவு சங்கங்களை அமைத்து அதன் மூலமாக ஒரு நிரந்தர விலையை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது தான் இவர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
Embed widget