மேலும் அறிய

சென்னை ; மனைவியை சுவற்றில் மோதி கொடூரமாக கொலை செய்த கணவன் !! எதற்காக கொலை ?

மது போதை தகராறில் மனைவின் தலையை சுவரில் மோதி கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை ; மனைவியை சுவற்றில் மோதி கொடூரமாக கொலை செய்த கணவன் !! எதற்காக கொலை ?

சென்னை போரூர் ஆர்.இ நகரைச் சேர்ந்தவர் சத்யராஜ் ( வயது 40 ) கார் ஓட்டுநர். இவரது மனைவி ரோசி ( வயது 35 ) இவர்களுக்கு சூர்யா ( வயது 9 ) மற்றும் நித்யா ( வயது 7 ) என இரு குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ், இம்மாதம் 24 ம் தேதி இரவு மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.

அவரது தலையை பிடித்து சுவரில் வேகமாக மோதியுள்ளார். இதில் ரோசி மயங்கியதும், அன்று இரவு முழுதும் வீட்டில் இருந்த சத்யராஜ் அடுத்த நாள் அதிகாலையில் வெளியேறியுள்ளார். கிறிஸ்துமஸ் தினமான அன்று ரோசியின் இரு குழந்தைகளும், அப்பகுதியில் உள்ள ரோசியின் அக்கா வீட்டிற்கு தனியாக சென்றுள்ளனர்.

அங்கு, அப்பா - அம்மா இடையே சண்டை நடந்ததும், அதில் அடிபட்ட அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் மயங்கி கிடந்த ரோசியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

போரூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆதம்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த சத்யராஜை கைது செய்தனர். மது போதையில், ரோசியின் தலையை பிடித்து சுவரில் வேகமாக மோதியதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஷோ ரூம் ஷட்டரை தூக்க உதவிக்கு அழைத்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்த நபர்

சென்னை கண்டிகையை சேர்ந்த 57 வயது பெண், ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேட்டையில் உள்ள ஒரு மொபைல் ஷோரூமில் துப்புரவு ஊழியராக பணிபுரிகிறார். கடந்த 1ம் தேதி, ஷோரூம் ஷட்டரை திறக்க சாலையில் சென்ற, 34 வயது மதிக்கத்தக்க நபரை உதவிக்கு அழைத்துள்ளார்.

ஷட்டரை திறந்து கொடுத்த அந்த நபர் ஷோரூமுக்குள் பெண்ணை தள்ளி ஷட்டரை பூட்டியுள்ளார். பின், கீழே விழுந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் சீண்டல் செய்துள்ளார். பின், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என கூறி தப்பினார்.

புகாரின் படி, கண்ணகி நகர் போலீசார் வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில், ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அந்த நபரை பார்த்த அப்பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சென்று அவரை பிடித்து விசாரித்ததில் கந்தன் சாவடியை சேர்ந்த சந்துரு ( வயது 34 ) என தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே பலாத்காரம், பாலியல் சீண்டல், வழிப்பறி உள்ளிட்ட, 10 - க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மாதவரம் To திருவொற்றியூர் வரை புதிய வழித் தடம் முழு விவரம் !!
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மாதவரம் To திருவொற்றியூர் வரை புதிய வழித் தடம் முழு விவரம் !!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget